கடந்த சில வருடங்களாகவே, உடலில் டாட்டூ குத்திகொள்வது நவ நாகரீகங்களில் ஒன்றாக பார்க்கப்டுகிறது. நம் முன்னோர்கள், பக்கவிளைவு இல்லாத பச்சிலையை கொண்டு தயாரித்த மையை கொண்டு கைகளில் கோலம், மற்றும் விதவிதமாக பச்சை குத்தி கொண்டனர். ஆனால் இன்றைய தலைமுறையினரோ... பக்கவிளைவுகள் கொண்ட ரசாயனத்தை வைத்து, பச்சை குத்திவருகிறார்கள்.
கெர்ஸ்டின் டிரிஸ்டன் என்கிற இந்த பெண் அதற்க்கு கூறியுள்ள காரணம் தான் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதாவது உடைகள் அணிவதில் இருந்து, விடுதலை கிடைக்கவேண்டும் என்பதற்காக அவர் உடல் முழுவதும் பச்சை குத்தி கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இவர் இதுகுறித்த, புகைப்படங்களை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட இவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் எகிறியுள்ளது. சமூக வலைத்தளத்தில் இவர் அதிகம் பிரபலமான பின்னர் க்ரீஸ்டின் தற்போது டாட்டூ மாடலாக பணியாற்றி வருகிறார்.
டாட்டூ மாடலாக இருப்பதன் மூலம் லட்சங்களில் சம்பாதிக்கிறார். அதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராமில் தனது ஹாட் போட்டோக்களை வெளியிட்டு அதன் மூலமாகவும் சம்பாதித்து வருகிறார். அதே போல் சமூக ஊடகங்களில் ஏதேனும் பொருட்களை விளம்பரப்படுத்துவதாக இருந்தா அதற்க்கு அவர் அதிக கட்டணம் வசூலிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.