abortion
இன்றைய நவீன காலகட்டத்தில் திருமணமாகி ஓரிரு ஆண்டுகளுக்கு குழந்தை பற்றிப் பெரும்பாலான தம்பதியினர் சிந்திப்பதே இல்லை. இருப்பினும், உறவு வைத்து கொள்ள விரும்பி சிலருக்கு, கரு உண்டாகிறது. அவற்றை கலைக்க முற்படும் போது, பெரும்பாலான பெண்கள் கருக்கலைப்பு மாத்திரைகள் தான் தேர்ந்தெடுக்கிறார்கள்.
ஆனால், கருக்கலைப்பு மாத்திரைகள் சில நேரம் நம்முடைய உயிருக்கே கூட ஆபத்தாக முடிகிறது. எனவே, கருக்கலைப்பு மாத்திரைகளை பயன்படுத்துவதற்கு முன்னர் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் நீங்கள் தெரிந்து வைத்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் பற்றி இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
abortion
அல்ட்ரா சவுண்ட்:
நீங்கள் அல்ட்ரா சவுண்ட் என்னும் ஸ்கேன் எடுக்கும் போது, கரு கருப்பைக்கு வெளியே உருவாகியிருந்தால் கண்டிப்பாக கருக்கலைப்பு மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. அது எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கும்
சில நேரம் சினைப் பையிலிருந்து கருப்பைக்கு வரும் ஃபாலோபியன் குழல் வெடித்து உயிருக்கு ஆபத்தாகவும் முடியும்.
மேலும் படிக்க .....Red Blood Cell: உடலில் இரத்த சிவப்பணுவின் எண்ணிக்கையை அதிகரிக்கணுமா? இந்த 5 ஊட்டச்சத்துக்கள் அவசியம்...
அதேபோன்று , கடைசியாக மாதவிடாய் நின்று 49 நாள்களுக்குள் கருக்கலைப்பு மாத்திரையை சாப்பிட்டு விட வேண்டும். இல்லையெனில், கருக்கலைப்புக்கு பின்னர் அதீத மற்றும் ஒழுங்கற்ற இரத்தப்போக்கு போன்ற பின் விளைவுகள் இருக்கும்.
Abortion
அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, எடுப்பது அவசியம் என்றால் அது எத்தனையாவது நாளில் எடுக்க வேண்டும் என்று பெரும்பாலானோருக்கு சந்தேகம் இருக்கும். வாருங்கள் அதனை பற்றி தெரிந்து கொள்வோம்.
கருத்தரித்த முதல் இரண்டு வாரங்களுக்குள் கருக்கலைப்பு மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அக்காலத்தில் மாத்திரையின் மூலம் கருக்கலைந்திட 95 முதல் 97 சதவீதம் வாய்ப்பு உண்டு. ஒருவேளை, கருவுற்று ஒன்பது வாரங்களுக்கு மேலாக கடந்திருந்தால் கருக்கலைப்பு மாத்திரைகளை உண்ணக்கூடாது. அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, செய்தும் பயன் இல்லை. அதேபோன்று, கர்ப்பந்தரித்து 49 நாள்கள் கடந்திருந்தால் மருத்துவ கண்காணிப்பு இல்லாமல் மாத்திரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.