தீபாவளிக் கொண்டாட்டம் ஒருபுறம் இருந்தாலும் கொண்டாட்டங்களின் போது எழும் பிரச்சனைகளுக்கு நான்கு முக்கிய காரணங்கள் உண்டு. அவை, தீ, ஒலி மாசுபாடு, காற்று மாசுபாடு முக்கியமானவை ஆகும்.
தீபாவளியின் போது பட்டாசுகளைப் பயன்படுத்துவது ஒரு பொதுவான வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நடைமுறை, கொண்டாட்டத்தின் அடையாளமாக இருந்தாலும், சுற்றுச்சூழலுக்கு ஆபத்து விளைவிக்கும்.
எனவே, இந்த நாளில் காற்று மாசுபாடு மோசமான நிலைக்கு திரும்புவதால், அடிக்கடி சுவாச பிரச்சனைகள் கடுமையாக இருக்கும். அதிலும் குளிக்கலாம் என்பதால், பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான முறையில் இருக்க, ஆஸ்துமா மற்றும் இருதய நோயாளிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
1. பெரும்பாலும் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களை தவிர்க்க வேண்டும். வெளியே செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்வது அவசியம்.
2. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை நிறைய சாப்பிடுங்கள்.
3. உணவுகள் பெரும்பாலும் வீட்டிலேயே சமைத்து சூடாக சாப்பிட வேண்டும்.
4. அதிக அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் நீர்ச்சத்துடன் இருங்கள்.
5. நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கான பரிசுகளைத் தேர்ந்தெடுக்கும்போது, இனிப்புகள் மற்றும் பிற ஆரோக்கியமற்ற தின்பண்டங்களுக்கு மாற்றாக ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுக்கவும்.
6. தீபாவளி நாளில் காற்று மாசுபாடு அதிகரித்து காணப்டுவதால், அந்த நாளில் அதிகாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வதை தவிர்க்கவும்.