ஜீ தமிழ் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வரும் 'சண்டக்கோழி' என்கிற புத்தம் புதிய சீரியல் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் இந்த தொடரை விரும்பி பார்க்கும் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஆரம்பத்தில் இருந்தே எதற்கெடுத்தாலும் முட்டிக் கொள்ளும் இருவர், சந்தர்ப்ப சூழ்நிலையால் திருமணம் செய்து கொள்கின்றனர். இந்த இருவரும் தங்களுடைய தங்களுடைய திருமண வாழக்கையில் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும், தங்களின் பிரச்னையை கை விட்டுவிட்டு, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு காதலில் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே இந்த சீரியலின் கதைக்களம்.
இந்த தகவல் ரியா விஸ்வநாதனின் ரசிகர்கள் மற்றும் இந்த தொடரை விரும்பி பார்க்கும் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த சீரியலின் ஹீரோ நியாஸ் விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய தொடரில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.