Actor Soori
காமெடி நடிகராக இருந்து, 'விடுதலை' படத்தின் மூலம் கதாநாயகனாக மாறி உள்ளவர் நடிகர் சூரி. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து, கதையின் நாயகனாக நடிக்க வரும் வாய்ப்புகளையே தேர்வு செய்து நடிக்கிறார். தற்போது 'விடுதலை 2' படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வரும் இவர், மீண்டும் தன்னுடைய நண்பர் விஷ்ணு விஷாலுடன் சேர்ந்துவிட்டதாக புகைப்படம் வெளியிட்டு உறுதி செய்துள்ளார்.
Vishnu Vishal
இருவருமே நெருங்கிய நண்பர்களாக இருந்த நிலையில், விஷாலின் தந்தை மூலம், நிலம் ஒன்றை வாங்க சூரி முயற்சி செய்தார். அப்போது சூரியின் பணத்தை விஷாலின் தந்தை அபகரித்து விட்டதாக புகார் கூறிய சூரி, இது குறித்து காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். பின்னர் நீதிமன்றம் வரை இந்த பிரச்சனை சென்றது.
சமீபத்தில் சூரியை சந்தித்து பேசியதாகவும், விரைவில் இது குறித்து ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து, விஷ்ணு விஷால் தனது சமூக வலைத்தளத்தில், சூரியுடன் தானும் தன்னுடைய தந்தையும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதில் வாழ்க்கையில் சில குழப்பங்கள் நடந்தால், அதை எப்படி தீர்க்க வேண்டும் என நாம் முயற்சிக்க வேண்டுமே தவிர, நாம் வாழ்வது ஒரு குறுகிய வாழ்க்கை, இதில் பிரச்சனைகள் செய்து கொண்டிருக்க நாங்கள் விரும்பவில்லை என பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.