திருமணமான இரண்டே வருடத்தில் மகாலட்சுமியை விவாகரத்து செய்கிறாரா ரவீந்தர்? சோகமான பதிவுக்கு அவரே கூறிய பதில்!
பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை கடந்த 2 வருடங்களுக்கு முன், திருமணம் செய்து கொண்ட நிலையில், ரவீந்தர் போட்ட சோகமான பதிவை கண்டு நெட்டிசன்கள் பலர் விவாகரத்து குறித்த கேள்வியை எழுப்பி வருகிறார்கள்.
Ravindhar Chandrashekar Mahalakshmi
சன் மியூசிக் தொலைக்காட்சியில் பாடல்கள் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர் மகாலட்சுமி. இதை தொடர்ந்து, அனில் என்பவரை திருமணம் செய்து கொண்டு... சின்னத்திரையில் இருந்து விலகிய மகாலட்சுமி, மகன் சச்சின் பிறந்த சில வருடம் கழிந்து, மீண்டும் சின்னத்திரையில் சீரியல் நடிகையாக அறிமுகமானார்.
Ravindhar Chandrashekar Mahalakshmi
மீண்டும் நடிக்க துவங்கிய சில வருடங்களிலேயே... கணவர் அனிலிடம் இருந்து விவாகரத்து பெற்ற மகாலட்சுமி சீரியல் நடிகர் ஈஸ்வரிடம், நெருக்கம் காட்டியதாக.. ஈஸ்வரின் மனைவி கூறிய புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்ற நிலையில்... ஒரு கட்டத்தில் ஈஸ்வரின் மனைவி, அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று விலகினார்.
Ravindhar Chandrashekar Mahalakshmi
இந்த கள்ளக்காதல் சர்ச்சை அரங்கேறிய இரண்டு வருடங்களுக்கு பின் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை, மகாலட்சுமி திடீர் என திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். பணத்துக்கு ஆசை பட்டு தான், ரவீந்தரை மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டதாக விமர்சனங்கள் எழுந்தது.
Ravindhar Chandrashekar Mahalakshmi
மேலும் நெட்டிசன்கள் பலர், பல்வேறு விஷயங்களை சுட்டி கட்டி இவர்களை ட்ரோல் செய்த நிலையில், அதற்க்கு இருவருமே தக்க பதிலடி கொடுத்தனர்.
Ravindhar Chandrashekar Mahalakshmi
ரவீந்தர் - மகாவுக்கு திருமணம் ஆகி, இரண்டு வருடங்கள் ஆன பின்னரும், அவர்கள் எந்த ஒரு சோகமான பதிவு போட்டாலும் அது விவாகரத்துக்காக தான் என சில நெட்டிசன்கள்... கொளுத்தி போடும் நிலையில், இதற்க்கு ரவீந்தரும் பலமுறை பதிலடி கொடுத்துள்ளார்.
Ravindhar Chandrashekar Mahalakshmi
அந்த வகையில் தற்போது ரவீந்தர், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய பழைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, எனக்குள் என்னையே மிஸ் செய்வது போல் மோசமாக உணர்கிறேன் என கூறியுள்ளார்.
Ravindra Chandrasekaran, Mahalakshmi
இதை பார்த்த நெட்டிசன் ஒருவர்... உங்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டதா என கேட்க... அதற்கு ரவீந்தர், எனக்கு எஞ்சி இருக்கும் ஒரே உலகம் மகாலட்சுமி தான். அதனால் நீங்கள் கடினமாக பிரார்த்தனை செய்து கொண்டே இருங்கள், ஆனால் நீங்கள் நினைப்பது மட்டும் நடக்காது, அது சாத்தியமற்றது என பதில் கொடுத்துள்ளார் என்பது குறிபிடித்தக்கது.