உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஜனவரி மாதம் முடிவடைந்தது. இதில் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்வு செய்யப்பட்டார். மணிச்சந்திரா முதல் ரன்னரப்பாகவும், மாயா இரண்டாவது ரன்னரப்பாகவும் மாறினர். மேலும் தினேஷ் மற்றும் விஷ்ணு அடுத்தடுத்த இடத்தை கைப்பற்றினர்.
குறிப்பாக பிரதீப் ஆண்டனி விவகாரத்தில் தீர விசாரிக்காமல் அவரை வெளியேற்றியது. தான் செய்த தவறை மறைக்க ஏதேதோ காரணம் கூறி மழுப்பினார். எனவே கமல் ஒரு சிறந்த நடுவராக நடந்து கொள்ளவில்லை என்கிற ஆதங்கம் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
இறுதியில் மக்களின் ஆதரவோடு அர்ச்சனா டைட்டில் பட்டதை கைப்பற்றிய நிலையில், மீண்டும் பிக்பாஸ் சீசன் 7 பிரபலங்கள் ஒன்றினையும், பிக்பாஸ் கொண்டாட்டத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் நடந்து முடித்துள்ளது. இதில் பவா செல்லதுரை, யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி, ஐஷு போன்றவர்கள் கலந்து கொள்ளவில்லை. அதே போல் கலந்து கொண்ட போட்டி யார்கள் சிலர் மீண்டும், பிரச்சனை செய்யும் விதத்தில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
அதே போல் தொகுப்பாளர், யாரிடம் நீங்கள் மன்னிப்பு கேட்க விரும்புகிறீர்கள் என கேட்டபோது... விசித்ரா தினேஷிடம் மன்னிப்பு கேட்க விரும்புவதாக கூறி, என்ன விஷயத்திற்காக மன்னிப்பு கேட்கிறார் என்பதை கூட சொல்லாமல், பொத்தாம் பொதுவாக கேட்டதால் அதனை உதாசீனப்படுத்துவது போல் தினேஷ் எந்த விஷயத்திற்காக மன்னிப்பு கேட்கிறார் என்பதை கூட சொல்லாமலேயே அவர் கேட்பதால், இதனை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது போல் தட்டிக் கழித்துள்ளார். மொத்தத்தில் பிக்பாஸ் கொண்டாட்டம் கொஞ்சம் களோபரத்தில் முடிவடைந்துள்ளது.