கடுப்பான கூல் சுரேஷ்! மன்னிப்பு கேட்ட விசித்ரா! உதாசினம் செய்த தினேஷ்.. பிக்பாஸ் கொண்டாட்டத்தில் நடந்த களோபரம்

First Published Mar 19, 2024, 1:51 PM IST

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி முடிவடைந்து இரண்டு மாதங்கள் ஆன பின்னர், தற்போது பிக்பாஸ் கொண்டாட்டம் நடந்து முடிந்துள்ளது. இதில் நடந்த சில பிரச்சனைகள் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன... அது பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.
 

உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஜனவரி மாதம் முடிவடைந்தது.  இதில் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்வு செய்யப்பட்டார். மணிச்சந்திரா முதல் ரன்னரப்பாகவும், மாயா இரண்டாவது ரன்னரப்பாகவும் மாறினர். மேலும் தினேஷ் மற்றும் விஷ்ணு அடுத்தடுத்த இடத்தை கைப்பற்றினர்.
 

ஆரம்பத்தில் இருந்தே, சண்டை சச்சரவோடு சென்று கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி, பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது. மேலும் நடுவராக இருந்த கமல்ஹாசன் இரண்டாம் பட்சமாக நடந்து கொண்டதாக பிக்பாஸ் ரசிகர்கள் கூறி வந்தனர். 

நான் மட்டும் நயன்தாராவுக்கு சளைத்தவளா என்ன? தரம் பிரித்து... லிஸ்ட் போட்டு.. கோடியில் கல்லா கட்டும் சமந்தா!

குறிப்பாக பிரதீப் ஆண்டனி விவகாரத்தில் தீர விசாரிக்காமல் அவரை வெளியேற்றியது. தான் செய்த தவறை மறைக்க ஏதேதோ காரணம் கூறி மழுப்பினார். எனவே கமல் ஒரு சிறந்த நடுவராக நடந்து கொள்ளவில்லை என்கிற ஆதங்கம் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. 

அதேபோல் வினுஷாவை நிக்சன் பாடி ஷம்மிங் செய்து கமெண்ட் செய்ததை பற்றி ஒரு வார்த்தை கூட கேட்காத கமல்,  நிக்சன் அர்ச்சனாவை சொருகி விடுவேன் என கூறியதையும் தட்டிக் கேட்கவில்லை. ஆனால் தினேஷ் தவுளத்து என்று கூறிய ஒரு வார்த்தைக்கு அரை மணி நேரம் விளக்கம் கொடுத்து கடுப்பேற்றினார். 

கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில்.. விஜய் சேதுபதி கேரக்டரை நிராகரித்த 2 பிரபலங்கள்! ஃபர்ஸ்ட் சாய்ஸ் யார் தெரியுமா

இறுதியில் மக்களின் ஆதரவோடு அர்ச்சனா டைட்டில் பட்டதை கைப்பற்றிய நிலையில், மீண்டும் பிக்பாஸ் சீசன் 7 பிரபலங்கள் ஒன்றினையும், பிக்பாஸ் கொண்டாட்டத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் நடந்து முடித்துள்ளது. இதில் பவா செல்லதுரை, யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி, ஐஷு போன்றவர்கள் கலந்து கொள்ளவில்லை. அதே போல் கலந்து கொண்ட போட்டி யார்கள் சிலர் மீண்டும், பிரச்சனை செய்யும் விதத்தில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

குறிப்பாக மாயா கேங் எது சொன்னாலும், அதற்கு ஓவர் கைதட்டல்கள் பறந்த நிலையில்... அதனால் கடுப்பான கூல் சுரேஷ் கடுப்பாக்கியத்துடன் முணுமுணுத்து கொண்டே இருந்தாராம்.

Jovika About Sri Hari: வனிதா மகள் ஜோவிகாவிடம்... அண்ணன் ஸ்ரீஹரி பற்றி எழுபட்ட கேள்வி! எதிர்பாராத நச் பதில்!

அதே போல் தொகுப்பாளர், யாரிடம் நீங்கள் மன்னிப்பு கேட்க விரும்புகிறீர்கள் என கேட்டபோது... விசித்ரா தினேஷிடம் மன்னிப்பு கேட்க விரும்புவதாக கூறி, என்ன விஷயத்திற்காக மன்னிப்பு கேட்கிறார் என்பதை கூட சொல்லாமல், பொத்தாம் பொதுவாக கேட்டதால் அதனை உதாசீனப்படுத்துவது போல் தினேஷ் எந்த விஷயத்திற்காக மன்னிப்பு கேட்கிறார் என்பதை கூட சொல்லாமலேயே அவர் கேட்பதால், இதனை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது போல் தட்டிக் கழித்துள்ளார். மொத்தத்தில் பிக்பாஸ் கொண்டாட்டம் கொஞ்சம் களோபரத்தில் முடிவடைந்துள்ளது.

click me!