Guru Peyarchi 2022: குரு பெயர்ச்சியால் 2023 வரை அமோகமான இருக்கும் ராசிகள்..இன்று முதல் அதிர்ஷ்ட காற்று ஆரம்பம்

First Published May 26, 2022, 4:00 PM IST

Guru Peyarchi Palangal 2022: கடவுள்களின் குருவான வியாழன் கிரகம் ஏப்ரல் 13 அன்று தனது சொந்த ராசியான மீன ராசியில் நுழைந்துள்ளார். அவர் வரும் 22 ஏப்ரல் 2023 வரை மீனத்தில் இருப்பார். இதனால் யாருக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

guru

குரு பெயர்ச்சி 2022:

தேவகுரு வியாழன் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படும். மகிழ்ச்சி, செழிப்பு, அதிர்ஷ்டம், நல்ல தொழில் ஆகியவற்றின் காரணியான குரு பகவான்  நவகிரக நாயகர்களில் முக்கியமானவர். ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு கிரகம் பெயர்ச்சி ஆகும் போதோ அல்லது மற்ற கிரகங்களுடன் இணையும்போதோ, அதன் பாதிப்பு அனைத்து ராசிகளிலும் இருக்கும். கிரகங்களின் பெயர்ச்சி வாழ்க்கையில் பல நேர்மறை மற்றும் எதிர்மறை மாற்றங்களைக் கொண்டு வருகிறது. இந்தப் பெயர்ச்சி சிலருக்கு சுபமாகவும், சிலருக்கு அசுபமாகவும் இருக்கும். அதன்படி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

guru peyarchi 2022

மேஷம்:

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு, குருவின் மாற்றம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். பணப்பற்றாக்குறையை நீங்கள் உணர்ந்தாலும் அதற்கு தீர்வு கிடைக்கும். திடீர் பண வரவு உண்டாகும். உங்களுக்கு தேவையான அங்கீகாரம் கிடைக்கும். வேலையில் முன்னேற்றம் இருக்கும். உங்களின் ஒட்டுமொத்த நேரம் மிகவும் நன்றாக இருக்கும். நீண்ட நாள் எதிர்பார்த்த காரியம் விரைவில் நிறைவேறும். 

guru peyarchi 2022

ரிஷபம்:

வியாழன் சஞ்சாரம் ரிஷபம் ராசிக்காரர்களின் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும். ரிஷபம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நேரம் நன்றாக இருக்கும். திடீரென்று உங்களுக்கு பணம் சம்பாதிக்கும் வழிகள் அதிகரிக்கும். உங்கள் நாளை புத்திசாலித்தனமாக செலவிடுங்கள்.  வாழ்வில் வெற்றி கிடைக்கும். போட்டி தேர்வுகளில் முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படும்.

guru peyarchi 2022

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் அதிர்ஷ்ட காற்று வீசும். எந்த செயலிலும் எளிதாக வெற்றி பெறுவார்கள். தடைப்பட்ட காரியங்கள் முடிவடையும். வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் இருக்கும். தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். இந்த நேரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். 

guru peyarchi 2022

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு வியாழனின் சஞ்சாரம் சிறப்பாக இருக்கும். தொழிலில் புதிய மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும்.வாழ்வில் புதிய வேலை கிடைக்கும். பதவி உயர்வு இருக்கும். வியாபாரிகளின் வாழ்வில் முன்னேற்றம் இருக்கும்.  எந்த விஷயத்திலும் தெளிவு பிறக்கும். இருப்பினும், யாரையும் நம்பி எந்த காரியத்திலும் இறங்காதீர்கள். 

  மேலும் படிக்க....Rahu Peyarchi: ராகு கேதுவின் அருளால் கோடீஸ்வர யோகம்..அடுத்த ஒரு வருடத்திற்கு இந்த 4 ராசிக்காரங்க காட்டுல பணமழை

click me!