Veerapandi Sri Gowmariamman Temple
தேனி அருகே உள்ள வீரபாண்டியில், பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் 8 நாட்கள் வரை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழாவை முன்னிட்டு கம்பம் நடும்விழா ஏப்ரல் 17ம் நடைபெற்றது. வரும் மே 7ம் தேதியன்று முதல் திருவிழா துவங்கி 14ம் தேதி நிறைவு பெறும்.
Local Holiday
இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 10ம் தேதி நடைபெற உள்ளதால் இதனை காண தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் அவர்களின் பாதுகாப்பு கருதி வரும் மே 10ம் தேதி தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Theni Collector Shajeevana
இதுதொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தேனி வீரபாண்டி ஸ்ரீ கெளமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மே 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Government office
இந்த உள்ளுர் விடுமுறை செலவாணி முறிச்சட்டம்-1881 (Negotiable Instruments Act-1881) கீழ் வராது என்பதால், அன்றைய தினம் தேனி மாவட்டத்தில் தலைமை கருவூலம், சார்நிலை கருவூலகங்கள் மற்றும் அரசு பாதுகாப்பான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன், செயல்படும். மேலும் உள்ளுர் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக மே 25ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.