உலக அருங்காட்சியகங்கள் தினம்.. மதுரை அரசு அருங்காட்சியகத்தில் 6 நாள் நடக்கும் விழா - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

உலக அருங்காட்சியகங்கள் தினம்.. மதுரை அரசு அருங்காட்சியகத்தில் 6 நாள் நடக்கும் விழா - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Ansgar R |  
Published : May 12, 2024, 10:28 PM IST

World Museum Day : பல்லாங்குழி, நொண்டி, தட்டாங்கல், தாயம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளை உலக அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு மதுரை அரசு அருங்காட்சியம் நடத்தி வருகின்றது.

தமிழ்நாடு அரசு அருங்காட்சியகங்கள் துறையின் கீழ் இயங்கும் மதுரை மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில், மே 18-ஆம் தேதி உலக அருங்காட்சியகங்கள் தினத்தை முன்னிட்டு தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள் தொடர்பான போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி நேற்று மே 11-ஆம் தேதி தொடங்கி, மே 16ம் தேதி வரை பல போட்டிகள் நடைபெறவுள்ளது. 

அதன்படி நேற்று மே 11ல் பல்லாங்குழி, இன்று 12ம் தேதி தட்டாங்கல், 13ம் தேதி தாயம், 14ம் தேதி நொண்டி, 15ம் தேதி கிட்டிபுல், 16ம் தேதி கோலிக்குண்டு ஆகிய போட்டிகள் நடைபெறுகின்றது. ஒவ்வொரு நாளும் காலை 10 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1 மணிக்கு அந்த போட்டிகள் நிறைவடையும். போட்டியில் பங்கு பெற விரும்புவோர் தங்களது பெயர்களை 97900 33307 என்ற செல்பேசி எண்ணில் முன்பதிவு செய்ய வேண்டும். 

இப்போட்டிகளில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது. போட்டிக்கான விதிமுறைகள் போட்டி நடைபெறும் நாளன்று வழங்கப்படும். இப்போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் அருங்காட்சியக விதிமுறைகளுக்கு உட்பட்டு பெரியவர்கள் ரூ.5-ம், சிறியவர்கள் ரூ.3-ம், வெளிநாட்டவர்கள் எனில் ரூ.100-ம் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

இப்போட்டிகளில் பங்கேற்கும் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். வெற்றி பெறும் நபர்களுக்கு பரிசுகளும் சான்றிதழும் வழங்கப்படும், இன்றைய தினம் தட்டாங்கல் போட்டியானது நடைபெற்றது, தட்டாங்கல் ஆட்டம் ஒரே மாதிரியான உருண்டையான சிறு கற்களைக் கொண்டு பெரும்பாலும் சிறுமியர் விளையாடும் விளையாட்டாக இருந்து வருகின்றது. 

இது பாண்டிக்கல் என்றும் அழைக்கப்படும். சங்க காலத்தில் இதன் பெயர் தெற்றி. இவ்விளையாட்டு வெவ்வேறு ஊர்களில், வெவ்வேறு எண்ணிக்கையுள்ள கற்களைக் கொண்டு விளையாடப்படுகிறது. இன்றைய போட்டியில் சிறுவர் சிறுமியர் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி கலந்துகொண்டு தட்டாங்கல் விளையாடினர்.

02:17நல்லகண்ணுக்கு பாரத் ரத்னா விருதை வழங்க வேண்டும் - தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை
03:02செவிலியர்கள் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
04:38தலைவர் விஜய் குறித்து அனைவரும் கருத்து சொல்வதற்கு காரணம் தோல்வி பயம் ! TVK செங்கோட்டையன் பேட்டி
03:33எடப்பாடி பழனிச்சாமி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார் - அமைச்சர் ரகுபதி பேட்டி.
04:35சேகர்பாபு போல நான் அண்டிப்பிழைக்கும் ஆண்டி அல்ல.. ரவுடி போல சேகர்பாபு இருக்கிறார் - அண்ணாமலை பேட்டி
04:14நாட்டின் நிலவரம் என்னவென்றே விஜய்க்கு தெரியவில்லை...இவரை வைத்து என்ன செய்வது..? இபிஎஸ் பேட்டி
03:28கூட்டணி பேச்சுவார்த்தை காங்கிரஸ்யிடம் நடந்து வருகிறது தொகுதி எண்ணிக்கை குறித்து பேசவில்லை - கனிமொழி
03:05அண்ணா மற்றும் திராவிடத்தை விமர்சனம் செய்பவர்களுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை ! வைகோ பேட்டி
02:32கோயில் அருகே சுடுகாடு மற்றும்பாதாள சாக்கடை திட்டம் அமைப்பதற்கு எதிர்ப்பு கிராம மக்கள் எச்சரிக்கை
04:50விஜய்யின் இன்ஜினில் ஆயில் இல்லை...எங்களிடம் 2 டபுள் இன்ஜின் இருக்கிறது ! அண்ணாமலை அதிரடி பேட்டி