Vijay : புஸ்ஸி ஆனந்த் சகவாசம் விஜய்க்கு நல்லதல்ல... என் மகனோட எதிர்காலத்த நினைச்சா பயமா இருக்கு - SAC குமுறல்

First Published Mar 28, 2024, 8:38 AM IST

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கிய பின்னர் அதுபற்றி எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்த எஸ்.ஏ.சி தற்போது முதன்முறையாக அதுபற்றி பேசி இருக்கிறார்.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கினார். அதோடு அக்கட்சி வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாது என்றும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் களமிறங்க உள்ளதாக அறிவித்தனர். அதுமட்டுமின்றி முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதால், தான் கமிட் ஆகியுள்ள படங்களில் நடித்து முடித்த பின்னர் சினிமாவை விட்டு விலகுவதாகவும் அறிவித்தார் விஜய்.

நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், அதில் உறுப்பினர் சேர்க்கை அண்மையில் தொடங்கப்பட்டது. இதற்காக பிரத்யேகமான செயலி ஒன்றை உருவாக்கி அதன் மூலம் உறுப்பினர் சேர்க்கையை நடத்தினர். அந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்ட சில மணிநேரங்களில் லட்சக்கணக்கானோர் அதில் சேர ஆர்வம் காட்டியதால் அந்த செயலியே ஸ்தம்பித்து போன சம்பவமும் அரங்கேறியது. ரசிகர்கள் விஜய் கட்சி மீது காட்டும் ஆர்வத்தை பார்த்து அரசியல் கட்சிகள் கதிகலங்கிப் போய் உள்ளன.

இது ஒருபுறம் இருக்க, விஜய் அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்து அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் எந்த வித கருத்தும் தெரிவிக்காமல் சைலண்டாக இருந்தார். இந்த நிலையில், ஒரு வழியாக மகனின் அரசியல் எண்ட்ரி குறித்து சமீபத்திய பேட்டியில் பேசி இருக்கிறார். அதில் விஜய்யின் எதிர்காலத்தை நினைத்தால் தனக்கு பயமாக இருப்பதாக அவர் பேசி இருப்பது வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி புஸ்ஸி ஆனந்தையும் அதில் வெளுத்து வாங்கி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... Vijay Antony : சரியான ஆள் பார்த்து ஓட்டு போடுங்க ஆனால் நோட்டாவுக்கு ஓட்டு போடாதீங்க.. விஜய் ஆண்டனி அட்வைஸ்..

அதில் அவர் பேசியிருப்பதாவது : “புஸ்ஸி ஆனந்த் ஆன்லைன் குரூப் ஒன்றை வைத்திருக்கிறார். அதில் விஜய்யும் இடம்பெற்றுள்ளார். புஸ்ஸி ஆனந்த் மன்றத்துக்கு வந்த உடன் அங்கிருக்கும் பெஞ்சில் படுத்துக் கொள்வார். அதுமட்டுமின்றி அதை அருகில் இருப்பவர்களை வைத்து ஒரு போட்டோவும் எடுக்க சொல்லி அதை அந்த ஆன்லைன் குரூப்பில் பதிவிடுவார். அந்த போட்டோவை 50 பேர் ஷேர் செய்ய வைப்பதோடு, 100 பேரை லைக் போடவும் சொல்வார்.

விஜய்யும் அந்த புகைப்படத்தை பார்த்து அண்ணன் நமக்காக எப்படி உழைக்கிறார் என்று நினைத்து அவரை அழைத்து நாளையில் இருந்து என்னுடைய அறையில் இருங்க என்று சொல்லிவிடுவார். இதுதான் அங்கு நடந்துகொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட ஆள் கூட இருந்தா என் மகனோட எதிர்காலம் என்னவாகுமோ என ஒரு தந்தையாக எனக்கு பயமாக இருக்கிறது” என தன் மனக் குமுறல்களை எல்லாம் அந்த பேட்டியில் கொட்டி இருக்கிறார் எஸ்.ஏ.சி.

இதையும் படியுங்கள்... Harika And Aravish Wedding: சன் டிவி சீரியல் ஹீரோயினுடன்... சுந்தரி சீரியல் நடிகர் அரவிஷுக்கு டும் டும் டும்!

click me!