Sun TV Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பரபரப்பான தொடர் விரைவில் முடிவுக்கு வருகிறது! ரசிகர்கள் ஷாக்.!

First Published Apr 27, 2024, 2:14 PM IST

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும், முக்கிய சீரியல் ஒன்று... விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
 

சன் டிவி தொலைக்காட்சியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'பிரியமான தோழி'. 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல், தற்போது 500க்கும் மேற்பட்ட எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.  இந்த தொடர் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக, வெளியாகியுள்ள தகவல் இந்த தொடரை விரும்பி பார்க்கும் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
 

நட்பை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரை, ஆரம்பத்தில் கே சிவா என்பவர் இயக்கி வந்த நிலையில்,  பின்னர் ஓ என் ரத்தினம் என்பவர் தற்போது இயக்கி வருகிறார்.  பல இல்லத்தரசிகளின் மனதை கவர்ந்த இந்த சீரியலில்,  சாண்ட்ரா பாபு கதாநாயகியாக நடிக்க, விக்கி ரோஷன் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்த மூஞ்ச வச்சிட்டு எப்படி நடிப்பனு தான கேட்ட... ரோலர் கோஸ்டர் எமோஷனுடன் வெளியான 'ஸ்டார்' பட ட்ரைலர்!

மேலும் வி ஜே கவுசிக் கேப்ரியல், தீப்தி ராஜேந்திரா, வனஜா பரத் குமார், பாஸ்கர் பாலசுப்ரமணி, உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்து வருகின்றனர். அதாவது... "பவித்ராவும் ஆதியும் சிறுவயதில் இருந்தே உயிர் நண்பர்கள். சங்கவி ஆதியை ஒரு தலையாக காதலிக்க வாங்குகிறார். பின்னர் பவித்ராவை ஆதியின் அண்ணன் காதலிக்கும் நிலையில்,  பவித்ராவுக்கு அரவிந்துக்கும் திருமணம் நடைபெறுகிறது.  திருமணமான ஒரு சில மாதங்களிலேயே, சங்கவியின் தந்தை ராஜசேகரின் தூண்டுதல் பெயரில் அரவிந்த் கொலை செய்யப்படுகிறார்.

இதைத்தொடர்ந்து இது கொலை என்பது ஆரம்பத்தில் தெரியாமல் இருக்கும் ஆதிக்கு,  இது தெரிய வரவே தன்னுடைய தோழியின் வாழ்க்கை சீரழிந்து விடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு அவரே பவித்ராவின் சம்மதம் இன்றி தாலி கட்டி மனைவியாகிறார். ஆதிக்கும் - பவித்ராவுக்கும் திருமணம் நடந்ததால் சங்கவி பவித்ராவுக்கு எதிரியாக மாறுகிறார். பவித்ராவை சாகடிக்கும் அளவுக்கு துணிகிறார்.

Rathnam: வசூல் வேட்டை ஆடினாரா... கோட்டை விட்டாரா விஷால்! 'ரத்னம்' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தற்போது பவித்ரா ஆதியிடம் இருந்து பிரிய முடிவு செய்துவிட்டதால், ஆதிக்கும் - சங்கவிக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதே நேரம் ஆதி மீது நட்பை தாண்டி பவிக்கு காதலும் துளிர் விட்டுள்ள நிலையில், மீண்டும் ஆதியும் - பவித்ராவும் ஒன்று சேர்வார்களா? என்கிற பரபரப்பான கதைக்களத்தில் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

பல இல்லத்தரசிகளின் ஃபேவரட் தொடரான 'பிரியமான தோழி' சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பல ரசிகர்ளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த தொடர் முடியும் பட்சத்தில் புதிதாக என்ன தொடர் ஒளிபரப்பாகும் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

Jyotika: ஜோதிகாவின் நடத்தை சரி இல்லை! ஓவராக பேசிய பயில்வான்... வெச்சு செய்யும் சூர்யா ரசிகர்கள்!

click me!