விஜய் டிவி தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி கிழமை வரை ஒளிபரப்பாகி வரும் சீரியல், 'சிறகடிக்க ஆசை'. வழக்கமான மாமியார் - மருமகள்களை மையப்படுத்திய கதை களம் என்றாலும், இந்த சீரியலில் , சண்டை, சச்சரவு, செண்டிமெண்ட் நடுவே ஹீரோவின் டைமிங் காமெடி மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.
மீனாவுக்கு முத்து தன்னுடைய வீட்டு வாசலிலேயே பூ கடை வைத்து கொடுத்த நிலையில், அதை பிளான் பண்ணி விஜயா தூக்க வைத்தார். இதை தொடர்ந்து, முத்து மீனாவுக்காக புதிய வண்டி ஒன்றை வாங்கி அதில் மொபைல் பூ கடை ஒன்றை வைத்து விஜயாவுக்கு பதிலடி கொடுத்தார். மீனா முத்துவுக்கு உதவுவதும், முத்து மீனாவுக்கு உதவுவதும், ரோகினி மற்றும் மனோஜ் இடையே பிரச்னையை ஏற்படுத்தியது.
கோவிலில் பூஜை செய்ய வேண்டும் என்று, அவரை தோப்பு கரணம் போட வைத்து, அவர் தலையில் தண்ணீரை ஊற்றி , கையில் கற்பூரம் ஏற்ற வைத்து அலற விட்டது மட்டும் இன்றி, அவரது அங்க பிரதஷ்ணம் செய்ய வைத்தும், கோலமே போட தெரியாத ரோஹிணியை கோலம் போட வைக்கிறார். இதை பார்த்து மற்றவர்கள் பாவ பட்டாலும், முத்து இந்த காட்சிகளை பார்த்து என்ஜாய் செய்கிறார். இந்த ப்ரோமோ தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.