அதாவது கோச் கார்த்திக் தனது ஒரு போனை கிஃப்ட் ஆக கொடுத்து சப்ரைஸ் செய்கிறான். பிறகு தனம் வீட்டுக்கு வர வீட்டில் ஒரு பூஜைக்கு ஏற்பாடு செய்திருக்க தனத்தை பூஜையில் கலந்து கொள்ளுமாறு அழைத்துச் செல்கின்றனர். இதனால் தனம் ஹாலின் சோபாவில் பேக்கை வைத்துவிட்டு பூஜையில் பங்கேற்கிறாள்.
ஒரு வழியாக போன் யாரது கையிலே சிக்காமல் இருக்க பூஜை முடிந்தது தனம் பதற்றத்தோடு பேக்கை எடுத்துக் கொண்டு வேகவேகமாக ரூமுக்குள் செல்கிறாள். ரூமுக்குள் சென்றதும் முதலில் போனை தேட பேக்கில் போன் இல்லாமல் இருக்க இன்னும் அவளது பதற்றம் உச்சத்தை தொடுகிறது.
இந்த நேரத்தில் சாரு தனத்தின் ரூமுக்குள் வந்து என்ன தேடுற என்று கேட்க தனம் அமைதியாகவே இருக்க இதுதான தேடுற என்று போனை எடுத்துக்காட்ட தனம் பயந்து நடுங்குகிறாள். இது எப்படி என் கைக்கு வந்துச்சு என்று கேட்க அந்த பக்கம் நடந்து போகும் போது ஏதோ வைப்ரேட் ஆகுற மாதிரி இருந்தது. உன்னுடைய போன்ல தெரிஞ்சது வீட்டில யார் என்று கண்ணிலாவது பட்டா பிரச்சனையாகிடும் என்று நான் தானே எடுத்து மறைத்து வைத்தேன் என சொல்கிறாள்.
Yashika: யாஷிகாவுடன் CSK மேட்ச் பார்த்து ரணகளம் செய்த.. விஷ்ணு மற்றும் ரவீனா! வைரலாகும் போட்டோஸ்!
உனக்கு எப்படி போன் வந்தது என்று கேட்க கார்த்திக் தான் எனக்கு கிப்ட்டா கொடுத்தாரு. கேம் பத்தி கம்யூனிகேஷன் பண்றதுக்கு எதுவும் இல்லை என்பதால் இதை கொடுத்தார் என்று சொல்ல சாரு கார்த்திக் உனக்காக நிறைய பண்றாரு. அவர் உன்னோடு இருந்தால் உனக்கு ரொம்ப உதவியா இருக்கும் அவரை விட்டுடாத என்று சொல்லி போனை கொடுக்க அதை வாங்கிக் கொள்ளும் தனம் நன்றி சொல்கிறாள்.