அதாவது, தினமும் தினமும் பதறி அடித்துக் கொண்டு ரகுராமிடம் விசயத்தை சொல்கின்றனர். அவர் உடனே ஸ்டேஷனுக்கு கிளம்பி செல்கிறார். ஸ்டேஷனில் போலீஸ் மாயாவின் விசா டைம் முடிந்துவிட்டது இன்னும் 12 மணி நேரத்தில் ஊருக்கு கிளம்பியாக வேண்டும் என்று சொல்கின்றனர். மாயா நான் ஸ்டுடென்ட் விசா இருக்கு அப்ளை பண்ணி இருக்கேன் என்று சொல்ல ஸ்டுடென்ட் விசா வந்ததும் காட்டுங்க, அதுவரை நீங்கள் எங்கே இருக்க முடியாது என்று 12 மணி நேரம் கெடு வைக்கின்றனர்.
பிறகு மாயா இல்லாம நான் எப்படி இருப்பேன்.? என்ன இந்த அளவுக்கு ஊக்கப்படுத்தி கொண்டு வந்தது அவ தானே என்று தனம் கண்கலங்கி அழ மாயா ஸ்டுடென்ட் வீசா வந்ததும் திரும்பி வந்து விடுவேன். அப்புறம் ரெண்டு பேரும் சேர்ந்து தான் இருப்போம் என்று சமாதானம் செய்கிறாள். பிறகு ரூமுக்கு வந்து சீனுவை மிஸ் பண்ணுவேன் என்று வருந்துகிறாள்.
அடுத்ததாக மாயா பட்டு புடவையில் வந்து சீனுவுடன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று கூப்பிடுகிறாள். இருவரும் கோவிலுக்கு செல்ல அங்கு மாயா பூ வாங்கி தர சொல்லி வைத்துக் கொள்கிறாள். கோவிலில் வைத்து சீனுவிடம் தன்னுடைய காதலை சொல்ல சீனு அதை நம்ப மறுக்கிறான். மாயா சீனு காதலை தேடும் போது பொண்ணுங்க சிரிச்சு பேசினாலே லவ்வுன்னு ஆயிடுமா என்று திட்டிய வார்த்தைகளை திரும்ப சொல்லி வெறுப்பேற்ற மாயா சூலாயுதத்தின் மீது சத்தியம் செய்து காதலை வெளிப்படுத்த சீனு எதுவும் சொல்ல முடியாமல் நிற்கிறான்.
பிறகு கோவிலுக்கு வரும் சிவராமன் மாயாவை கூட்டிச் சென்றுவிட தனியாக வீட்டுக்கு வரும் சீனு மாயாவுக்கு என்ன பதில் சொல்வது எனக்கு தெரியாமல் தவிக்கிறான். அதே சமயம் மாயா ஊருக்கு போகும் விஷயம் தெரிந்து சாரு, பார்வதி, பத்மா ஆகியோர் சந்தோஷமாக இருக்கின்றனர். எல்லாவற்றையும் பேக் செய்துவிட்டு மாயா ரகுராம் ரூமுக்குச் சென்று உங்க வீட்ல என்னால சின்ன சின்ன பிரச்சனைகள் நிறைய நடந்திருக்கு ஆனா எப்போதும் நீங்க என்னை விட்டுக் கொடுக்கல என்று எமோஷனலாக பேசி நன்றி சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.