தமிழ் சினிமாவில் 73 வயதிலும், தன்னுடைய வயதுக்கு ஏற்றாப்போல் கதைகளை தேர்வு செய்து ஹீரோவாக நடித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில், கடந்த ஆண்டு வெளியான 'ஜெயிலர்' திரைப்படம், சுமார் 650 கோடிக்கு மேல் வசூலித்து, சாதனை படைத்தது. இந்த படத்தின் வெற்றியால் மனம் குளிர்ந்து போன சன் பிச்சர்ஸ் நிறுவனம்... ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிரூத் ஆகியோருக்கு கார் மற்றும் செக் வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்தது. அதே போல் இப்படத்தில் நடித்த மற்ற கலைஞர்களுக்கும் பார்ட்டி வைத்து சிறப்பு பரிசு கொடுத்து கௌரவித்தது.
தற்போது தன்னுடைய அடுத்த படத்தை 'ஜெய்பீம்' பட இயக்குனர்... TJ ஞானவேல் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு 'வேட்டையன்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், போன்ற பலர் நடித்து வருகிறார்கள். ரஜினியாகாந்த் என்கவுன்டருக்கு எதிரான போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடிக்கிறார். இப்படம் உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.
இதுவரை தன்னுடைய இரண்டாவது மகனை ஊருக்கு காட்டாமல் பொத்தி பொத்தி வளர்த்து வந்த சௌந்தர்யா இந்த புகைப்படத்தில் இரண்டாவது மகனை ரசிகர்களுக்கு காட்டியுள்ளார். இவர் பார்ப்பதற்கு அப்படியே முதல் மகன் வேத்தின் xerox போல் இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.