'ஜவான்' படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த, இயக்குனர் அட்லீ தமிழில் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் 'ராஜா ராணி'. 2013-ஆம் ஆண்டு வெளியான தன்னுடைய முதல் படத்தையே மிகவும் கிளாஸாக இயக்கி வெற்றிப்பட இயக்குனராக தன்னை கோலிவுட் திரையுலகில் நிலைநிறுத்திக்கொண்டார்.
சத்யராஜ் , சந்தானம் , சத்யன், அருண் ராஜ் காமராஜ் உள்ளிட்ட பலர் சப்போர்டிங் ரோலில் நடித்திருந்தனர். விருப்பம் இல்லாமல் பெற்றோருக்காக திருமணம் செய்து கொள்ளும் நயன்தாராவும் - ஆரியாவும் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் அந்நியர்கள் போன்றே இருக்கின்றனர். ஒரு நிலையில் நயன்தாராவின் காதலர் (ஜெய்) பத்ரிக்கு ஆர்யாவுக்கு தெரியவர அவரை காதலரோடு சேர்த்து வைக்க முடிவு செய்கிறார்.
எனினும் விமர்சனங்களை தாண்டி இந்த படத்தை வெற்றி பெற்றது. இந்த படம் நயன்தாராவுக்கு செம்ம கம் ஃபேக்காக அமைந்த நிலையில்... நஸ்ரியாவின் கியூட் நடிப்பும் அழகும் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.
பின்னர் வேறு சில படங்களில் தேதி கிளாஷ் ஆனதால் இப்படத்தில் இருந்து வெளியேறியுள்ளார். ஆனால் இப்படத்தின் வெற்றியை கண்டு... பல நாள் இந்த வாய்ய்ப்பை மிஸ் செய்ததற்காக ஃபீல் பண்ணியுள்ளாராம்.