பாரிஸ் ஒலிம்பிற்கு 400 மீ தொடர் ஓட்டப் போட்டிக்கு இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி தகுதி!

Published : May 06, 2024, 11:51 AM ISTUpdated : May 06, 2024, 11:53 AM IST
பாரிஸ் ஒலிம்பிற்கு 400 மீ தொடர் ஓட்டப் போட்டிக்கு இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி தகுதி!

சுருக்கம்

நசாவுவில் நடைபெற்ற தகுதிச் சுற்று போட்டியில் 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் அணி 2ஆம் இடம் பிடித்து பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளது.

ஜூலை 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரையில் பாரிஸ் ஒலிம்பிக் தொடர் நடைபெறுகிறது. இதற்காக இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டிக்கான தகுதி சுற்று போட்டிகள் பஹாமஸ் தலைநகர் நசாவுவில் நடைபெற்றது. இதில், இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி பங்கேற்று 2ஆம் இடம் பிடித்து ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளது.

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்ற இந்திய அணியில், ஆரோக்கிய ராஜீவ், சுபா வெங்கடேஷன் ஆகியோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்களுக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் முகமது அனாஸ் யாஹியா, முகமது அஜ்மல், ஆரோக்கிய ராஜீவ், அமோஜ் ஜேக்கப் ஆகியோர் தகுதிச் சுற்றில் 2ஆம் இடம் பிடித்து பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளனர். இதே போன்று மகளிருக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில், எம்.ஆர். பூவம்மா, சுபா வெங்கடேஷன், ரூபல் சௌத்ரி, ஜோதிகா ஸ்ரீ தண்டி ஆகியோர் இடம் பிடித்து ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளனர்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

Vaibhav Suryavanshi: சச்சின் சாதனையை முறியடிப்பாரா இந்த 15 வயது புயல்? வைபவ் புதிய வரலாறு!
கீர்த்தி சுரேஷை ஓவர்டேக் செய்த சேட்டன்.. கேரளாவின் இன்ஸ்டா 'கிங்' ஆன சஞ்சு சாம்சன்!