nita ambani
இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் பிரபல தொழிலதிபருமான அம்பானி ரிலையன்ஸ் என்ற மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கி உள்ளார். தனது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீ மூலம் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டி வரும் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி. இந்த தம்பதிக்கு ஆகாஷ் அம்பானி – இஷா அம்பானி என்ற இரட்டை குழந்தையும், ஆனந்த் அம்பானி என்ற இளைய மகனும் உள்ளனர்.
இதில் கடந்த 2018-ம் ஆண்டு அம்பானி மகள் இஷாவுக்கும், 2019-ம் ஆண்டு ஆகாஷ் அம்பானிக்கும் திருமணம் நடந்தது. இந்த சூழலில் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்செண்ட் என்ற பெண்ணை காதலித்து வந்தார். இதை தொடர்ந்து இவர்களுக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்த நிலையில் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி குஜராத்தின் ஜாம்நகரில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது.
மார்ச் 1 முதல் 3 வரை நடந்த இந்த கோலாகல நிகழ்ச்சியில் இந்திய திரைப்பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் மட்டுமின்றி சர்வதேச பிரபலங்களும் கலந்து கொண்டனர். பல நூறு கோடி செலவில் நடந்த ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் நிகழ்வு பேசு பொருளாக மாறியது.
குறிப்பாக நீதா அம்பானி அணிந்திருந்த புடவைகள், நகைகள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளன. நீதா அம்பானியின் ஆடைகள் மற்றும் ஆடம்பர நகைகள் பிரபலமானவை அந்த வகையில் . ஆனந்த்-ராதிகா ப்ரீ வெட்டிங் கொண்டாட்டத்தின் மூன்றாவது நாளில் அவர் அணிந்த பெரிய மரகத பச்சை நெக்லஸ் கவனத்தை ஈர்த்தது.
பிரபல ஆடை வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த காஞ்சிபுரம் புடவையும் பேசு பொருளாக மாறியது. அதே போல் அவர் அணிந்திருந்த நெக்சஸும் பலரின் கவனத்தை ஈர்த்த்து.அந்த நெக்லஸின் விலை ரூ.400 முதல் ரூ.500 கோடி இருக்குமாம்.
நீதா அம்பானியின் புடவை, அவரின் நெக்லஸ் ஆகியவை பரவலாக பேசப்பட்டாலும், அவர் தனது விரலில் அணிந்திருந்த பெரிய வைர மோதிரத்தை பலர் கவனிக்கத் தவறிவிட்டனர். இந்த மோதிரம் சொர்க்கத்தின் கண்ணாடி என்று அழைக்கப்படுகிறது. இது முகலாயர் காலத்திலிருந்தே இருக்கிறதாம்.
52.58 காரட் கொண்ட இந்த. பிரமாண்டமான வைர மோதிரத்தின் விலை தோராயமாக ரூ.53 கோடி என்று கூறப்படுகிறது.. NMACC தொடக்க விழாவிலும் இதே மோதிரத்தை நீதா அம்பானி.அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.