Nayanthara and Vignesh Shivan
தமிழ் சினிமாவில் புதுமண தம்பதிகளாக வலம் வரும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் மகாபலிபுரத்தில் கடந்த ஜுன் 9ம் தேதி கோலாகலமாக நடந்து முடிந்தது. இதில் ஷாருக்கான், ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சூர்யா, கார்த்தி என கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். பிரபல மலையாள நடிகரான திலீப்பும் திருமணத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்தினார்.
Nayanthara and Vignesh Shivan
பிரபல மலையாள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பிரபல மலையாள நடிகர் தீலிப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த திலீப்புக்கு தற்போது அந்த வழக்கால் மீண்டும் பிரச்சனையில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Nayanthara and Vignesh Shivan
நயன்தாராவின் திருமணத்திற்கு திலீப் வந்ததை பார்த்த சினிமா ரசிகர்கள் கோபம் அடைந்தார்கள். நயன்தாரா எதற்காக மலையாள நடிகர் திலீப்பை அழைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். என்ன தான் நயன்தாரா, கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் திலீப்பை தானா அழைக்க வேண்டும் என்கிறார்கள் ரசிகர்கள்.