திருமணமான நடன இயக்குனருடன் ரகசிய உறவு.. பல சர்ச்சைகளை கடந்து இன்று உச்சத்தில் இருக்கும் டாப் நடிகை..

First Published May 4, 2024, 12:50 PM IST

நயன்தாராவின் திரை வாழ்க்கை, வெற்றிகரமானதாக இருந்தாலும், அவரின் தனிப்பட்ட வாழ்க்கை பல சிக்கல்களும் சர்ச்சைகளும் நிறைந்ததாகவே உள்ளது.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நயன்தாரா ஐயா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. இதனால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறினார்.  20 ஆண்டுகளுக்கும் மேல் ஹீரோயினாக நடித்து வரும் நயன் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகறார்.. மேலும் அவர் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும் இருக்கிறார்.

நயன்தாராவின் திரை வாழ்க்கை, வெற்றிகரமானதாக இருந்தாலும், அவரின் தனிப்பட்ட வாழ்க்கை பல சிக்கல்களும் சர்ச்சைகளும் நிறைந்ததாகவே உள்ளது. நயன்தாராவின் காதல் உறவு, பிரபல நடிகரின் விவாகரத்துக்கே வழிவகுத்தது.

Nayanthara

நயன்தாரா மற்றும் சிம்பு காதல் உறவு அந்த நேரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. வல்லவன் படத்தில் பணிபுரியும் போது இருவரும் டேட்டிங் செய்ய ஆரம்பித்ததாக கிசுகிசுக்கப்பட்டது. இருப்பினும், உறவு சில மாதங்கள் மட்டுமே நீடித்தது. பின்னர் இருவரும் பிரிந்துவிட்டனர். நயன்தாரா அந்தரங்க புகைப்படங்கள் ஆன்லைனில் கசிந்தது இந்த பிரிவுக்கு காரணம் என்றும் கூறப்பட்டது. காதல் முறிவுக்குப் பிறகு, சிம்புவுடன் எந்தப் படத்திலும் ஜோடி சேர மாட்டேன் என்று நயன்தாரா அறிக்கை வெளியிட்டார்.

இந்த பிரேக் அப்-ஐ தொடர்ந்து நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த 2009ஆம் ஆண்டு வில்லு படத்தில் பணிபுரியும் போது காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உண்மையில், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று வதந்திகள் வந்தன, இருப்பினும் இருவரும் வதந்திகளை உறுதிப்படுத்தவும் இல்லை, மறுக்கவில்லை.

ஆனால் பொது நிகழ்ச்சிக்கு ஒன்றாக செல்வது, பிரபுதேவாவின் பெயரை தனது கையில் பச்சை குத்தியது என வெளிப்படையாக பல செயல்களை செய்தார். மேலும் பிரபுதேவாவும் நயன்தாராவை திருமணம் செய்யப் போவதாக வெளிப்படையாகவே அறிவித்தார்.

பிரபுதேவாவுக்கு ஏற்கனவே திருமணமான போதிலும், நயன்தாரா மீதான தனது காதலை பகிரங்கமாக வெளிப்படுத்தினார். எனினும் பிரபுதேவாவின் மனைவி அவர், மற்றொரு நடிகையுடன் உறவில் இருப்பதாகவும், தனது குடும்பத்தை புறக்கணித்ததாகவும் கூறி குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததும் சர்ச்சை வெடித்தது. பல சர்ச்சைகளுக்குப் பிறகு, பிரபுதேவாவும் லதாவும் விவாகரத்து செய்து கொண்டனர்.

இதற்கிடையில், நயன்தாரா தான் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்துக்கொண்டார். இறுதியில், பிரபுதேவாவும் நயன்தாராவும் 2011இல் பிரிந்தனர். நயன்தாரா திருமணம் செய்து கொள்ள கேட்ட போது, பிரபுதேவா அதை தள்ளிப்போட்டதாகவும் அவர்கள் பிரிந்ததற்கு இதவும் முக்கிய காரணம் என்றும் அப்போது கூறப்பட்டது.

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலிக்க தொடங்கினர். 2015 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்தனர். இருவரும் அப்போது முதலே காதலித்து வந்த நிலையில் அப்போதே பதிவு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்..

கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வாடகைத் தாய் மூலம் பெற்றோரானதாக இருவரும் அறிவித்தனர். இவர்களுக்கு உயிர், உலக் என்ற  இரட்டை மகன்கள் உள்ளனர். தனது கணவர் மற்றும் மகன்களுடன் இருக்கும் புகைப்படங்களை நயன்தாரா அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல காதல் விவகாரங்களில் சிக்கி சர்ச்சைகளில் சிக்கினார் நயன். ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் சர்ச்சைகள் விமர்சனங்களை கொண்டு தன்னை தானே செதுக்கி கொண்டு புதிய உச்சத்திற்கு சென்றுள்ளார். தென்னந்தியாவின் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாகவும், பணக்கார நடிகையாகவும் நயன்தாரா இருக்கிறார்.

இதனிடையே நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் ரவுடி பிக்சர்ஸ் என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு 9ஸ்கின் என்ற அழகு சாதனப் பொருட்களை அறிமுகப்படுத்தினார்.

2023-ம் ஆண்டு நயன்தாராவின் வாழ்க்கையில் மிகப்பெரிய மைல்கற்களில் ஒன்றாகும், அவர் திரையுலகில் 20 ஆண்டுகளை நிறைவு செய்ததுடன், பாலிவுட்டிலும் அறிமுகமானார். அட்லியின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார் நயன்தாரா. இந்த படத்தில் ஷாருக்கான், பிரியாமணி, சன்யா மல்ஹோத்ரா, சுனில் குரோவர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் உலகளவில் 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

டெஸ்ட், மண்ணாங்கட்டி ஆகிய படங்களில் தற்போது நயன்தாரா நடித்து வருகிறது. தனி ஒருவன் 2 படத்திலும் நயன்தாரா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நிவின் பாலி தயாரிக்கும் டியர் ஸ்டூடண்ட்ஸ் என்ற மலையாளப் படத்திலும் அவர் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!