
தமிழ் திரை உலகில் "முறைமாமன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சுந்தர் சி தமிழ் சினிமாவின் கமர்சியல் மன்னனாக கடந்த 29 ஆண்டுகளாக பயணித்து வருகிறார். பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ள சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு அரண்மனை என்கின்ற திரைப்படம் வெளியானது.
அந்த படத்திற்கு மக்கள் மத்தியில் கிடைத்த மாபெரும் வரவேற்பு, அந்த படத்தின் இரண்டு, மூன்று மற்றும் நான்கு ஆகிய பாகங்களை எடுக்க சுந்தர்சியை உத்வேகப்படுத்தியது என்றால் அதில் மிகையல்ல. இந்நிலையில் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் இணைந்து நடித்துள்ள சுந்தர் சி-யின் அரண்மனை 4 திரைப்படம் நேற்று மே 3ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இந்த படத்திற்கு தொடர்ச்சியாக கிடைத்து வருகிறது. இந்த வருடம் துவங்கியதிலிருந்து பெரிய அளவில் வெற்றி திரைப்படங்களை கொடுக்காமல் இருந்து வந்த கோலிவுட் உலகிற்கு தனது முதல் வெற்றியை பரிசாக அளித்து இருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி என்றால் அது மிகையல்ல.
இந்நிலையில் வெளியான அறிக்கைகளின்படி, அரண்மனை 4 இந்தியா முழுவதும் அனைத்து மொழிகளிலும் வெளியான முதல் நாளில் சுமார் 3.60 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. திரையரங்குகளில் 36.04% ஆக்கிரமிப்பு அளவை தொடர்ச்சியாக பெற்றுவருகிறது அரண்மனை 4. சிவகார்த்திகேயன் வழங்கும் குரங்கு பெடல் படம் அதே மே 3ம் தேதி வெளியாகியிருந்தாலும், கமெர்ஷியல் வெற்றி படமாக மாறியுள்ளது அரண்மனை 4.
அரண்மனை 4ல் நடிகர் நடிகைகள் தமன்னா பாட்டியா, ராஷி கண்ணா, கோவை சரளா, VTV கணேஷ், யோகி பாபு, டெல்லி கணேஷ், சந்தோஷ் பிரதாப் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். ஏற்கனவே அரண்மனை படத்தி 3 பாகங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.