Vijay
நடிகர் விஜய் கடந்த ஆண்டு முதல் தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் தொகுதிவாரியாக முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற மாணவ, மாணவிகளை கவுரவிக்கும் விதமாக கல்வி ஊக்கத்தொகை வழங்கி வருகிறார். அந்த வகையில் இரண்டாம் ஆண்டாக இந்த வருடமும் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
Vijay Education Award Ceremony
இதனால் இம்முறை அதுபோன்று நடக்காமல் இருக்க ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அதுமட்டுமின்றி கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன. கடந்த முறை மிகவும் லேட் ஆனதற்கு அங்கு வந்திருந்த மாணவ, மாணவிகள் விஜய்யுடன் மேடையில் செல்பி எடுத்ததும் ஒரு முக்கிய காரணம். அதனால் இம்முறை அங்கு விருது வாங்க வருபவர்கள் செல்போன், கேமரா கொண்டுவர தடை விதிக்கப்பட்டு உள்ளது. அப்படி கொண்டு வந்திருந்தாலும் அதை வெளியே உள்ள பாதுகாப்பாளர்களிடம் கொடுத்துச் செல்ல அறிவுறுத்தி உள்ளனர்.
restrictions in Vijay Education Award Ceremony
அதுமட்டுமின்றி அங்கு வந்துள்ள மாணவர்கள் பேனா, நோட்பேட் உள்ளிட்ட பொருட்களை உள்ளே கொண்டு செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இவற்றை பெற்றுக்கொண்டு டோக்கன் வழங்கப்பட்டு, விழா முடிந்த பின்னர் பொருட்களை பெற்றுக்கொள்ளுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அதுமட்டுமின்றி கடந்த முறையை விட இம்முறை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... இன்னைக்கு ஒரு புடி... விஜய்யின் கல்வி விருது விழாவில் கம கமவென தயாராகும் விருந்து; மதிய உணவுப்பட்டியல் இதோ!