"தமிழர்களின் கலாச்சாரத்தை ஒழிக்க நினைக்கும் காங்கிரஸ்".. "செங்கோல்" விவகாரம் - நாராயணன் திருப்பதி பதிலடி!

"தமிழர்களின் கலாச்சாரத்தை ஒழிக்க நினைக்கும் காங்கிரஸ்".. "செங்கோல்" விவகாரம் - நாராயணன் திருப்பதி பதிலடி!

Ansgar R |  
Published : Jun 27, 2024, 06:34 PM IST

NarayananThirupathy : செங்கோலை அகற்ற வேண்டும்.. அரசியல் சாசனம் வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பேசிய சமாஜ்வாதி கட்சி எம்.பி-யின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார் மூத்த பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி.

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற அவையில் பேசிய சமாஜ்வாடி கட்சி எம்பி, இந்தியாவில் செங்கோல் ஆட்சி முறியடிக்கப்பட வேண்டும் என்றும், அரசியல் சாசனம் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் பேசிய கருத்துக்களுக்கு எதிர்க்கட்சிகளும் வரவேற்பு அளித்த நிலையில் இதுகுறித்து நமது ஏசியாநெட் தமிழ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பிரத்தியேக பேட்டி ஒன்றில் மூத்த பாஜக தலைவர் நாராயணன் திருப்பதி பதில் கூறியிருக்கிறார். 

நமது செய்தியாளரிடம் பேசிய நாராயணன் திருப்பதி, "செங்கோல் என்பது நீதி தவறாமல் ஆட்சி செய்வதற்கான அடையாளம், இது அரசாட்சியை குறிப்பது அல்ல. இது தமிழ் தெரிந்தவர்களுக்கு, நமது கலாச்சாரம் தெரிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் எதிர்கட்சிகளுக்கு, குறிப்பாக INDIA கூட்டணியில் உள்ளவர்களுக்கு தமிழக கலாச்சாரத்தை அழிப்பதே எண்ணமாக இருக்கிறது. 

நிச்சயம் அதற்கு திமுகவும் துணை போகிறது. ஆகவே நமது தமிழகத்தின் தொன்மையும், இந்திய நாட்டின் பாரம்பரியதையும் இவர்கள் விரும்பவில்லை என்று தெரிகிறது. தமிழர்களை, தமிழக கலாச்சாரத்தை அழிக்கும் எண்ணத்தில் தான் காங்கிரஸ் செயல்படுகிறது என்றும் அவர் கூறினார்.  

03:23இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுக ஆயத்தம்: மதுராந்தகத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞர் அணி கூட்டம்
06:51மக்களின் தீர்ப்பை ஏற்கத் தயங்குவது ஏன்? - மு.க.ஸ்டாலின் கருத்துகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் கண்டனம் !
08:06சென்னை: பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி. செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பு!
06:30வைகை நதியை மீட்புத் திட்டம்: மதுரையில் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் பிரம்மாண்ட தூய்மை இயக்கம் !
04:20விநாயகர் சதுர்த்தி விழா: தூத்துக்குடியில் விறுவிறுப்பாக நடந்த மாட்டு வண்டி பந்தயம் !
02:11தவெக ஆட்சியாக ஆட்சியை நடத்தாமல் காட்சியாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள் ! கி. வீரமணி பேட்டி
04:02திருச்சி : திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையில் நடந்த பெரியார் நினைவேந்தல் பேரணி !
02:38அரசு சட்டக் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழா - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் பங்கேற்பு !
03:14பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ விரிவாக்கம் குறித்து முதலமைச்சர் விஜய் ஆய்வு !
02:57விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீரழிக்காதே! - அரசை கடுமையாக சாடி விவசாயிகள் சங்கத்தினர் பேட்டி !
Read more