Siragadikka Aasai: கர்ப்பமாகும் மீனா.. விஜயாவின் ஆசைக்கு வைக்கப்பட்ட ஆப்பு? இனி தான் இருக்கு ரியல் சம்பவம்!!

First Published Mar 22, 2024, 5:20 PM IST

'சிறகடிக்க ஆசை' சீரியலில் அடுத்தடுத்து நடக்கப்போவது என்ன? என்பது குறித்த சில தகவல்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
 

விஜய் டிவி தொலைக்காட்சியில், தற்போது TRP-யில் பட்டையை கிளப்பி வரும் முக்கிய சீரியல் 'சிறகடிக்க ஆசை'. தன்னுடைய ரயிலில் அடிபட்டு இறந்த ஏழை குடும்பத்தை சேர்ந்த ஒருவரின் மகளை தன்னுடைய மூத்த மகனுக்கு அண்ணாமலை திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். மூத்த மகனான மனோஜ்  ஏழைப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாது என, திருமண மண்டபத்தில் இருந்து வெளியேறி விடுகிறார்.

இதைத்தொடர்ந்து தன்னுடைய அப்பாவின் பேச்சை கேட்டு, வேறு வழி இல்லாமல் இரண்டாவது மகனான முத்து... கதாநாயகியான மீனாவை திருமணம் செய்துகொள்கிறார். இஷ்டமில்லாமல் இந்த திருமணம் நடந்த நிலையில், ஒரு கட்டத்தில் கிராமத்தில் இருந்து முத்துவும் -  மீனாவும் சென்னையில் வசிக்கும் அண்ணாமலை மற்றும் விஜியாவுடன் வந்து வாழ துவங்குகின்றனர்.

கேப்டன் விஜயகாந்த் மகனின் 'படை தலைவனு'க்கு பக்க பலமாக கை ராகவா லாரன்ஸ்! சம்பளம் குறித்து வெளியான தகவல்!

குடிகாரனாக இருக்கும் முத்து, தன்னுடைய மனைவிக்காக குடியை விட்டுவிட்டு... அனைவரும் ஆச்சர்யப்படும் அளவுக்கு மாறுகிறார். மேலும் தற்போது அண்ணாமலையின் மூன்று மகன்களுக்குமே திருமணம் நடந்து விட்டது. எனவே எப்படியும் முத்துவையும் மீனாவையும் வீட்டை விட்டு வெளியேற்ற விஜயா பிளான் போட்ட நிலையில், அது பலிக்காமல் போனது. எனினும் தன்னுடைய மற்ற இரண்டு மருமகள்களும் பணக்கார வீட்டைச் சேர்ந்த பெண்கள் என்று, அவர்களுக்கு வலிய போய் வேலை செய்யும் விஜயா... மீனாவை மட்டும் மிரட்டி உருட்டி ஒரு வேலைக்காரி போல் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்.

ரோகிணி, ஸ்ருதி ஆகிய இருவருமே வேலைக்கு போவதால்... அவர்கள் இருவருடன் ஒப்பிட்டால், மீனா எந்த விதத்திலும் சளைத்தவள் இல்லை என்பதை நிரூபிக்க, அவருக்கு நன்கு பூ கட்ட தெரியும் என்பதால் அவருக்கு முத்து தன்னுடைய வீட்டிற்கு வெளியிலேயே 'விஜயா' என்கிற பெயரில் புதிய பூ கடை ஒன்றை வைத்து கொடுக்கிறார்.

Top 10 Serial TRP: தடாலடியாக இருக்கே! TRP-யில் சன் டிவி சீரியலுக்கு செம்ம டஃப் கொடுக்கும் விஜய் டிவி தொடர்கள்!

மாலை கட்ட வந்த பெரிய ஆர்டரை செய்து முடித்த மீனா... அதில் வந்த லாபத்தில் முத்து கார் இல்லாமல் இருப்பதால், அவருக்கு ஒரு புதிய கார் ஒன்றை வாங்கி கொடுக்கிறார். மீனாவின் இந்த செயல் விஜயாவை கடுப்பாகியது மட்டும் இன்றி, ரோகிணியிடம் சொல்லி... மனோஜிக்கு புதிய பிஸ்னஸ் வைத்து தர சொல்லி வற்புறுத்துகிறார். 

இந்த பிரச்சனை முடிந்த கையேடு... ஸ்ருதிக்கும் - ரோகிணிக்கும் ஒரே நாளில் தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரோகிணியின் தந்தை கலந்து கொள்ள வேண்டும் என கட் அண்ட் ரைட்டாக விஜயா கூறியுள்ள நிலையில்... ரோகிணி இதற்காக என்ன செய்ய போகிறார் என்பது விடை தெரியாத கேள்வியாக இருந்து வருகிறது.

Vichithra: கவுண்டமணியிடம் இந்த பழக்கம் இருக்கு..! இதுவரை யாரும் சொல்லாத கசப்பான சம்பவத்தை கூறிய விசித்ரா!

இப்படி பரபரப்பான காட்சிகளுடன் சிறகடிக்க ஆசை சீரியல் சென்று கொண்டிருக்கும் நிலையி, மீனா கர்ப்பமாக மாறினால் அது விஜயாவின் ஆசைக்கு வைக்கப்படும் பெரிய ஆப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. அதாவது தற்போது சமூக வலைதளத்தில் மீனா கர்ப்பமாக இருப்பது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது.
 

 இது ஒரு வேலை கனவாக இருக்குமா? என்கிற சந்தேகம் இருந்தாலும்... இனிவரும் நாட்களில் மீனா கர்ப்பமாக இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற நிறைய வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

செழியனுக்கு நடக்கும் திருமண ஏற்பாடு! கலங்கும் பாக்கியா! எழிலுக்கு தெரிந்த வந்த உண்மை? பாக்கியலட்சுமி அப்டேட்!

ஒருவேளை மீனா நிஜமாகவே கர்ப்பமாக இருந்தால், அண்ணாமலையின் அம்மா அதாவது முத்துவின் பாட்டி சொன்னது போல் கிராமத்தில் உள்ள சொத்துக்கள் அனைத்தும் மீனாவின் பிள்ளைக்கு வந்து சேரும். இது விஜயாவின் ஆசைக்கு மிகப்பெரிய ஆப்பாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே போல் மீனா கர்ப்பமானால் பல பிரச்சனைகளை விஜயா ஏற்படுத்துவார் என கூறப்படுகிறது. இனிவரும் வாரங்களில் எப்படி சீரியல் நகரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

click me!