விஜய் டிவி தொலைக்காட்சியில், தற்போது TRP-யில் பட்டையை கிளப்பி வரும் முக்கிய சீரியல் 'சிறகடிக்க ஆசை'. தன்னுடைய ரயிலில் அடிபட்டு இறந்த ஏழை குடும்பத்தை சேர்ந்த ஒருவரின் மகளை தன்னுடைய மூத்த மகனுக்கு அண்ணாமலை திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். மூத்த மகனான மனோஜ் ஏழைப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாது என, திருமண மண்டபத்தில் இருந்து வெளியேறி விடுகிறார்.
குடிகாரனாக இருக்கும் முத்து, தன்னுடைய மனைவிக்காக குடியை விட்டுவிட்டு... அனைவரும் ஆச்சர்யப்படும் அளவுக்கு மாறுகிறார். மேலும் தற்போது அண்ணாமலையின் மூன்று மகன்களுக்குமே திருமணம் நடந்து விட்டது. எனவே எப்படியும் முத்துவையும் மீனாவையும் வீட்டை விட்டு வெளியேற்ற விஜயா பிளான் போட்ட நிலையில், அது பலிக்காமல் போனது. எனினும் தன்னுடைய மற்ற இரண்டு மருமகள்களும் பணக்கார வீட்டைச் சேர்ந்த பெண்கள் என்று, அவர்களுக்கு வலிய போய் வேலை செய்யும் விஜயா... மீனாவை மட்டும் மிரட்டி உருட்டி ஒரு வேலைக்காரி போல் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்.
மாலை கட்ட வந்த பெரிய ஆர்டரை செய்து முடித்த மீனா... அதில் வந்த லாபத்தில் முத்து கார் இல்லாமல் இருப்பதால், அவருக்கு ஒரு புதிய கார் ஒன்றை வாங்கி கொடுக்கிறார். மீனாவின் இந்த செயல் விஜயாவை கடுப்பாகியது மட்டும் இன்றி, ரோகிணியிடம் சொல்லி... மனோஜிக்கு புதிய பிஸ்னஸ் வைத்து தர சொல்லி வற்புறுத்துகிறார்.
இப்படி பரபரப்பான காட்சிகளுடன் சிறகடிக்க ஆசை சீரியல் சென்று கொண்டிருக்கும் நிலையி, மீனா கர்ப்பமாக மாறினால் அது விஜயாவின் ஆசைக்கு வைக்கப்படும் பெரிய ஆப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. அதாவது தற்போது சமூக வலைதளத்தில் மீனா கர்ப்பமாக இருப்பது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது.
ஒருவேளை மீனா நிஜமாகவே கர்ப்பமாக இருந்தால், அண்ணாமலையின் அம்மா அதாவது முத்துவின் பாட்டி சொன்னது போல் கிராமத்தில் உள்ள சொத்துக்கள் அனைத்தும் மீனாவின் பிள்ளைக்கு வந்து சேரும். இது விஜயாவின் ஆசைக்கு மிகப்பெரிய ஆப்பாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே போல் மீனா கர்ப்பமானால் பல பிரச்சனைகளை விஜயா ஏற்படுத்துவார் என கூறப்படுகிறது. இனிவரும் வாரங்களில் எப்படி சீரியல் நகரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.