பிரபல தென்னிந்திய நடிகை மனிஷா கொய்ராலா 12 பேருடன் டேட்டிங் செய்த பின்னரே திருமணம் செய்து கொண்டதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தடுத்து ஹிந்தி மொழி படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்த நிலையில், சல்மான் கான், ஷாருக்கான், அமீர் கான், அக்ஷய் குமார் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
இதை தொடர்ந்து ஷங்கரின் இந்தியன் படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மனிஷாவின் நடிப்பு திறமையை பார்த்து வியந்துபோன ஷங்கர், தனது அடுத்த படமான முதல்வனிலும் இவரையே கதாநாயகியாக நடிக்க வைத்தார். அதே போல் 'பாபா' படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
மனிஷாவின் டேட்டிங் பட்டியலில் சினிமா பிரபலங்கள் மட்டுமல்ல, தொழில் அதிபர்கள் மற்றும் பிற பிரபலங்களும் உள்ளனர். அவர் சினிமாவில் நுழைந்தபோது, முதன்முறையாக நடிகர் விவேக் முஷ்ரனுடன் காதலில் கிசுகிசுக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. இவரை தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகரும், ரஜினிகாந்தின் காலா பட வில்லனுமான நானா படேகருடன் 90களில் டேட்டிங் செய்ததாக தகவல்கள் பரவின. 1996 ஆம் ஆண்டு, வெளியான அக்னிசாக்ஷி திரைப்படத்தில் ஒன்றாக இணைந்து நடிக்கும் போது இவர்களின் காதல் உறவு தொடங்கியது. அதுமட்டுமின்றி, நானா படேகரும் ஒரு சந்தர்ப்பத்தில் இந்தச் செய்தியை உண்மை என கூறியுள்ளார். சில வருடங்களிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
மனிஷா கொய்ராலா - சிசில் ஆண்டனியுடன் பிரிந்த பிறகு, நடிகர் ஆர்யன் வைத் உடன் டேட்டிங் செய்தார். அதன்பிறகு, நேபாளத்தில் உள்ள ஆஸ்திரேலிய தூதர் கிறிஸ்பின் கான்ராயுடன் மனிஷா டேட்டிங் செய்ததாக செய்திகள் வெளியாகின. இவர்கள் மட்டுமல்ல.. மனிஷா கொய்ராலாவை டேட்டிங் செய்தவர்களில்.. தொழிலதிபர் அசிம் பிரேம்ஜியின் மகன் தாரிக் பிரேம்ஜி, மாடல் ராஜீவ் மூல்சந்தனி, இசையமைப்பாளர் சந்தீப் சவுதா, கிறிஸ்டோபர் டோரிஸ் ஆகியோரும் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இப்படி வெளியாகும் தகவல்களை பலர் உறுதி செய்யவில்லை என்பதால் இதனை உண்மை என நாம் நம்ப முடியாது. டேட்டிங் வாழ்க்கை போரடித்து பின்னரே... சாம்ராட் டால்ஹா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமண வாழ்க்கையும் சரியாக அமையாததால் 2 வருடத்திலேயே கணவரிடம் இருந்தும் விவாகரத்து பெற்று பிரிந்தார். ஒரு கட்டத்தில் குடிக்கும், புகை பழக்கத்திற்கும் அடிமையான மனிஷா கொய்ராலா... புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து மீண்டார். பல சர்ச்சைகளுக்கு ஆளான இவர் தற்போது தன்னுடைய 53 வயதில் தனிமையில் வசித்து வருகிறார். கேன்சருக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் ஆர்வமாக கலந்து கொண்டும் சமூக சேவையிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.