புது பொண்டாட்டியுடன் வந்து மனைவி மீனாட்சிக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஆனந்த் - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

First Published Mar 21, 2024, 3:38 PM IST

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் ஆனந்த், ரியா கோவிலில் கல்யாணம் செய்ய கிளம்பிய நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம். 

Karthigai deepam serial

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இது சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா ரெஜிஸ்டர் ஆபீஸ் நடக்க இருந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்த ஆனந்த், ரியா கோவிலில் கல்யாணம் செய்ய கிளம்பிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. கார்த்திக் மற்றும் தீபா இருவரும் ஆனந்த் மற்றும் ரியாவை தேடி கோவில் கோவிலாக அலைய ஒரு கோவிலுக்குள் ஆனந்த் ரியா கழுத்தில் தாலி கட்டி நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். 

Zee Tamil Karthigai deepam serial

பிறகு கார்த்திக் ஆனந்தை சந்தித்து சத்தம் போட அவன் உன் பொண்டாட்டி மட்டும் என்ன ஒழுக்கமா பொய் சொல்லி தானே உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா என தீபாவை வம்புக்கு எடுக்க அப்ப எனக்கு கல்யாணம் ஆகல ஆனா உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு, உன்னை நம்பி ஒரு பொண்ணு இருக்கா என சொல்கிறான். 

ஆனந்த் எனக்கு ரியாவை ரொம்ப பிடிச்சிருக்கு ரொம்ப நாளா நாங்க காதல் பண்ணிக்கிட்டு இருக்கோம், நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ போறோம் என்று சொல்ல கார்த்திக் எவ்வளவு எடுத்து சொல்லியும் ஆனந்த் அவனது முடிவில் உறுதியாக இருக்க வேறு வழியில்லாமல் கார்த்திக் தீபா அங்கிருந்து கிளம்பி வருகின்றனர். 

இதையும் படியுங்கள்... கைவசம் 6 படங்கள்... வெயிட்டிங் லிஸ்டில் 6 படங்கள்! அடுத்த 5 வருஷத்துக்கு தனுஷ் ரொம்ப பிசி - அவரின் Line Up இதோ

Karthigai deepam serial Update

பிறகு ஆனந்தும் நாம வீட்டுக்கு போய் கல்யாணம் ஆன விஷயத்தை சொல்லிடலாம் என்று சொல்லி ரியாவை கூட்டிக்கொண்டு கிளம்பி வருகிறான். முதலில் கார்த்திக் தீபா வீட்டுக்கு வர மீனாட்சி கல்யாண நாளை கொண்டாடுவதற்காக வீட்டையே டெக்ரேட் செய்து ஆனந்துக்காக காத்திருப்பதை பார்த்து இவர்கள் வருத்தப்படுகின்றனர். 

வீட்டில் உள்ளவர்கள் என்ன விசேஷம் எதுக்கு டெக்கரேஷன் என கேட்க மீனாட்சி கல்யாண நாள் என சொல்லி ஆனந்த் வந்ததும் கேக் வெட்டலாம் என்று சொன்னால் அபிராமி உட்பட எல்லோருமே அதுக்கு என்ன சந்தோஷமா செய்யலாம் என்று சொல்கின்றனர். 

Karthigai deepam serial Today Episode

இந்த நேரம் பார்த்து ரியாவுடன் வீட்டுக்கு வரும் ஆனந்த் அவளை காரிலேயே உட்கார வைத்துவிட்டு உள்ள வர, மீனாட்சி வாங்க உங்களுக்காகத்தான் எல்லா டெக்கரேஷனும் பண்ணி இருக்கேன் என்று சந்தோஷமாக வரவேற்கிறாள். இதைப் பார்த்ததும் ஆனந்த் இவளுக்கு உண்மை எதுவும் தெரியல போல என புரிந்து கொண்டு நேரம் பார்த்து சொல்லலாம் என காத்திருக்கிறான். 

பிறகு கேக் வெட்ட தயாராக அபிராமி உனக்காக இவ்வளவு செஞ்சு இருக்கா ஆனா நீ என்ன பெங்களூரில் இருக்க சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு வீட்டுக்கு வாடா என் செல்லமாக திட்டுகிறார். ஆனந்த் கேக் கட் பண்ணாமல் எனக்கு வேண்டாம் என சொல்லி ரியாவை வீட்டுக்குள் அழைக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... செழியனுக்கு நடக்கும் திருமண ஏற்பாடு! கலங்கும் பாக்கியா! எழிலுக்கு தெரிந்த வந்த உண்மை? பாக்கியலட்சுமி அப்டேட்!

click me!