Karthigai deepam serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மில்லுக்கு வந்த முதல் நாளே கார்த்திக் மிஷினை சரி செய்து ஆனந்துக்கு ஷாக் கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, ஆனந்த் இவனை ஏதாவது பண்ணி இங்க இருந்து துரத்தணும் என்று கார்த்திக்கு எதிராக சதி செய்ய யோசித்து கொண்டிருக்கிறான், பிறகு மேனேஜரை வைத்து ஒரு திட்டத்தை தீட்டுகிறான்.
Karthigai deepam serial Update
மேனேஜர் நான் எனக்கு டீ கொண்டு வர சொன்னேன் என்று சொல்ல வேலை விஷயமா என்ன வேணாலும் சொல்லுங்க, நாய் செய்கிறேன். ஆனால் உங்களுடைய பெர்சனல் வேலையெல்லாம் பார்க்க முடியாது என்று எதிர்த்து பேச, தொழிலார்கள் கை தட்டி கொண்டாடுகின்றனர். மறுபக்கம் அபிராமி வீட்டில் ஐஸ்வர்யாவும் ரியாவும் கூட்டு சேர்ந்து கொண்டு, ரியாவின் அத்தை மாமா என்று சீரியல் ஆர்டிஸ்ட் சிலரை வர வைத்து அபிராமியிடம் பேசி சமாதானம் செய்து வைப்பது போல் நடிக்க வைக்க ஏற்பாடு செய்கின்றனர்.
Karthigai deepam serial Today Episode
அவர்களும் சீக்கிரம் நடிச்சிட்டு நாங்க கிளம்பனும், சீரியலுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கோம் என்று பேசுகின்றனர். இதையெல்லாம் மைதிலி ஒட்டு கேட்டு விடுகிறாள். அடுத்து ரியாவின் அத்தை மாமாவாக வந்தவர்கள் அபிராமிக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... எந்த கல்யாணத்துக்கு சென்றாலும் ஷங்கர் செய்யும் செயல்! முதல் முறையாக இப்படி செய்து பிரமிக்க வைத்த ரஜினி!