எந்த கல்யாணத்துக்கு சென்றாலும் ஷங்கர் செய்யும் செயல்! முதல் முறையாக இப்படி செய்து பிரமிக்க வைத்த ரஜினி!
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகளான, ஐஸ்வர்யா ஷங்கர் திருமணத்தில்... இதுவரை எந்த ஒரு திருமணத்திலும் செய்திடாத செயலை ரஜினிகாந்த் செய்துள்ளதாக பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியுள்ள தகவல் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில், இயக்குனர் கடந்த 1993-ஆம் ஆண்டு அர்ஜுன், மதுபாலா, மனோரமா, கவுண்டமணி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் வெளியாகி, சூப்பர் ஹிட் வெற்றி வெற்ற 'ஜென்டில்மேன்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஷங்கர். இந்த திரைப்படம் வெளியாகி சுமார் 30 வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தை வேறு ஒரு இயக்குனரை வைத்து தயாரித்து வருகிறார் KT குஞ்சுமோன்.
இந்த படத்தை தொடர்ந்து, பிரபு தேவா - நக்மா நடிப்பில் வெளியான காதலன், கமல்ஹாசனை வைத்து இந்தியன், பிரஷாந்த் - ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், எந்திரன், 2.0, போன்ற பல படங்களை இயக்கினார்.
பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது ஏற்பட்ட சோகம்! மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான்!
தற்போது இந்தியன் 2 படத்தை இயக்கி முடித்துள்ள இயக்குனர் ஷங்கர், இப்படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கி வருவதில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து, 'கேம் சேஞ்சர்' என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார் இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்தியன் 3 படத்தை எடுத்து முடித்த பின்னர் பாலிவுட் நடிகர், ரன்வீர் சிங்கை வைத்து ஒரு படத்தை எடுக்க உள்ளார். இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகிறது. திரையுலகில் நிலையான இடத்தை பிடித்தாலும், கடந்த சில வருடங்களாக இயக்குனர் ஷங்கர் தன்னுடைய மூத்த மகள் வாழ்க்கை சரியாக அமையவில்லை என்பதை நினைத்து மிகவும் வருந்தி வந்தார்.
இந்நிலையில் தன்னுடைய மகளுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்துள்ளார். ஐஸ்வர்யா ஷங்கர் திருமணம் ஏப்ரல் 15-ஆம் தேதி சென்னையில் மிக பிரமாண்டமாக நடந்த நிலையில், இதில் ஒட்டு மொத்த கோலிவுட் திரையுலகமே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர்.
இந்த திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கலந்து கொண்டார். அப்போது, இதுவரை எந்த ஒரு திருமண நிகழ்ச்சியிலும் செய்திடாத செயலை செய்துள்ளார் என்றும், ஷங்கர் மகள் கொடுத்து வைத்தவர் என கூறியுள்ளார் பிரபல பத்திரிகையாளர். அதாவது ரஜினிகாந்த் எந்த திருமணத்திற்கு சென்றாலும் பெரும்பாலும் சாப்பிடுவதை தவிர்த்து விடுவாராம். ஆனால் ஷங்கர் மிகவும் வேண்டி கேட்டுக்கொண்டதால், சாப்பிட்டு தான் சென்றாராம்.
அதே போல் ஷங்கரிடம் ஒரு பழக்கம் உள்ளதாம். அவர் எந்த ஒரு திருமணத்திற்கு சென்றாலும் எவ்வித பாகுபாடும் இன்றி, அனைவரது திருமணத்திலும் சாப்பிட்டு விட்டு தான் செல்வாராம். இது அவர்களுக்கு செய்யும் நன்றி கடனாக கருதுவாரம். இந்த தகவலையும் அந்த பத்திரிகையாளர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.