Karthigai deepam serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரவுடியிடம் இருந்து தப்பி வந்த அபிராமி விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, கார்த்திக்கு அபிராமியை தேடி போன இடத்தில ஒரு கடிதம் கிடைக்கிறது, அதில் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனையால் வாழ பிடிக்கவில்லை, அதனால் தற்கொலை செய்து கொண்டேன் என்று எழுதி இருக்க கார்த்திக் இந்த விஷயத்தை வீட்டில் சொல்கிறான்.
Zee Tamil Karthigai deepam serial
நம்ம வீட்டு பிரச்சனை நமக்கு மட்டும் தான் தெரியும், இந்த லெட்டரை வைத்து பார்க்கும் போது நம்ம குடும்பத்தில் இருக்க யாரோ ஒருவர் தான் அம்மாவை கடத்தி இருக்கணும் என்று சொல்ல ஐஸ்வர்யாவும் ராஜேஸ்வரியும் பதறுகின்றனர். கார்த்திக் நான் நீங்க தான் பண்ணீங்கனு சொல்லலையே என்று சொல்ல, நீ சொல்றத பார்த்தா எங்களை சொல்ற மாதிரி தான் இருக்கு, ஆனால் இதுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சொல்கின்றனர்.
இதையும் படியுங்கள்... Vijay Serial: முடிவுக்கு வரும் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Karthigai deepam serial Update
அடுத்து கார்த்திக் இப்போ யார் கடத்தினாங்க என்பது முக்கியம் இல்ல, அம்மாவை கண்டுபிடிக்கணும் அது தான் முக்கியம் என்று சொல்கிறான். மறுபக்கம் அபிராமி ஹாஸ்பிடலில் இருக்க, டாக்டர் இவங்க சொந்தகாரங்க யாராவது வந்தார்களா என்று கேட்க, யாரும் வரவில்லை என்று சொல்கின்றனர். இதனையடுத்து டாக்டர் யாரோ ஒருவருக்கு போன் போட்டு கிட்னி கேட்டு இருந்தீங்களே, இப்போ இருக்கு 20 லட்சம் ருபாய் செலவாகும் என்று டீல் பேச அவர்களும் சம்மதம் சொல்கின்றனர்.