தமிழில் பருத்திவீரன் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் பிரியாமணி. இதையடுத்து தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளிலும் நடித்த பிரியாமணி தற்போது பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார். கடந்தாண்டு அட்லீ இயக்கத்தில் வெளியாகி ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்த ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்திருந்தார் பிரியாமணி. ஜவான் படத்தின் வெற்றிக்கு பின்னர் அவருக்கு பாலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள திருக்கயில் மகாதேவா கோவிலுக்கு தான் அவர் அந்த இயந்திர யானையை பரிசாக வழங்கி இருக்கிறார். கேரள கோவிலும் அறிமுகப்படுத்தப்படும் இரண்டாவது இயந்திர யானை இதுவாகும். இந்த யானைக்கு மகாதேவன் எனவும் பெயரிட்டு உள்ளனர். இதுகுறித்து பேசிய நடிகை பிரியாமணி, “பீட்டா அமைப்புடன் சேர்ந்து இயந்திர யானையை பரிசாக அளிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என கூறினார்.