Anjali Marriage: விவாகரத்தான தயாரிப்பாளருடன் மலர்ந்த காதல்? அஞ்சலிலு விரைவில் திருமணமா? தீயாய் பரவும் தகவல்!

First Published Mar 22, 2024, 7:12 PM IST

நடிகை அஞ்சலி, விவாகரத்தான தயாரிப்பாளர் ஒருவரை காதலித்து வரும் நிலையில்... விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக தெலுங்கு வட்டாரத்தில் ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது.
 

Kollywood Actress Anjali

தெலுங்கு திரைப்படத்தின் மூலம் ஒரு நடிகையாக தன்னுடைய சினிமா கேரியரை துவங்கியவர் அஞ்சலி. ஆனால் இவரின் திறமைக்கு தீனிபோடும் படியான வாய்ப்புகளை அள்ளிக்கொடுத்தது தமிழ் சினிமா தான். அந்த வகையில் தமிழில், இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான, 'கற்றது தமிழ்', திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
 

Anjali

முதல் படத்திலேயே எதார்த்தமான நடிப்பால் ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்த அஞ்சலி.. இந்த படத்தை தொடர்ந்து,  நடித்த 'அங்காடி தெரு', 'தூங்கா நகரம்', 'எங்கேயும் எப்போதும்', 'வத்திக்குச்சி', 'இறைவி', போன்ற படங்கள் இவருடைய திரையுலக வாழ்க்கையில் மிக முக்கிய படங்களாக மாறியது.

Siragadikka Aasai: கர்ப்பமாகும் மீனா.. விஜயாவின் ஆசைக்கு வைக்கப்பட்ட ஆப்பு? இனி தான் இருக்கு ரியல் சம்பவம்!!
 

சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாத நடிகையாக அறியப்படும் அஞ்சலி, 'எங்கேயும் எப்போதும்', 'எனக்கு வாய்த்த அடிமைகள்', 'பலூன்' போன்ற படங்களில் நடிகர் ஜெய்யுடன் நடித்த போது அவரை காதலித்ததாக கூறப்பட்டது. இருவரும் லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும், திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருப்பதாகவும் பேச்சுகள் அடிபட்ட நிலையில்... ரசிகர்கள் எதிர்பார்த்தது போல் எதுவும் நடக்கவில்லை. இருவரும் நண்பர்கள் என்று கூறி இந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
 

இந்த காதல் சர்ச்சைக்கு பின்னர் சரிவர படங்களில் நடிக்காமல் இருந்த அஞ்சலி... தேடி வந்த பட வாய்ப்புகளையும் ஏற்க மறுத்ததாக கூறப்பட்டது. ஜெய்யை தொடர்ந்து அஞ்சலி தயாரிப்பாளர் ஒருவர் கட்டுப்பாட்டில் இருந்து வருவதாகவும் கூறப்பட்டது.

கேப்டன் விஜயகாந்த் மகனின் 'படை தலைவனு'க்கு பக்க பலமாக கை ராகவா லாரன்ஸ்! சம்பளம் குறித்து வெளியான தகவல்!
 

இதுவரை தன்னுடைய காதல் பற்றி வாய் திறக்காத அஞ்சலி ஒருமுறை... பேட்டி ஒன்றில் டாக்சிக் ரிலேஷன் ஷிப் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். அதில் ஒரு நபருடன் ஏற்பட்ட ரிலேஷன்ஷிப்பால்  தன்னுடைய கேரியரை  கவனிக்க முடியாமல் போனதால், அந்த உறவு தவறான உறவு என அஞ்சலி தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய கேரியருக்கு தடையாக இருந்த உறவை விட, கேரியருக்கு முக்கியத்துவம் கொடுப்பது தான் சிறந்தது என்றும், நடிகை அஞ்சலி அந்த பேட்டியில் தெரிவித்தார். 
 

ஒரு பிரேக் எடுத்து கொண்டு மீண்டும் தரமான படங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கியுள்ளார். அந்த வகையில்... இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்துள்ள இவர் இதை தொடர்ந்து நிவின் பாலி  இயக்குனர் ராம் இயக்கத்தில் நடித்துள்ள ஏழு கடல் ஏழு மலை படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தில் கிலிம்ஸி காட்சி வெளியாகி வைரலானது. இப்படம் அஞ்சலுக்கு வலுவான ரீ-எண்ட்ரியாக இருக்கும் என கூறப்படும் நிலையில், தற்போது அஞ்சலியின் திருமணம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Top 10 Serial TRP: தடாலடியாக இருக்கே! TRP-யில் சன் டிவி சீரியலுக்கு செம்ம டஃப் கொடுக்கும் விஜய் டிவி தொடர்கள்!
 

அதாவது கடந்த ஒரு வருடமாக அஞ்சலி, விவாகரத்தான தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அஞ்சலி பற்றி பல வதந்திகள் பரவியுள்ள நிலையில்... இதுவும் அதுபோல் வதந்தியா? அல்லது உண்மையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

click me!