அந்த காலத்தில் இருந்து, இந்த காலம் வரை, ஹீரோக்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைக்கப்படுகிறது. அதிலும் பல காமெடி நடிகர்கள் வந்து கொண்டே இருப்பதால் நடிகர்கள் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. இவை அனைத்தையும் தாண்டி ஒரு சில நடிகர்கள் மட்டுமே ரசிகர்களின் பல்ஸ் பார்த்து தங்களின் நடிப்பு திறமையை வெளிப்படுத்து எவர் கிரீன் நடிகர்களாக வலம் வருகிறார்கள்.
ஆந்திர மாநிலம் சட்டெனபள்ளி அருகே உள்ள ஒரு குக் கிராமத்தில் பிறந்தவர் தான் பிரம்மானந்தம். கடந்த 1956-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந் தேதி பிறந்தார். இவரது தந்தை மரவேலை செய்யும் ஆசாரியாக இருந்தவர். இவரின் உடன் பிறந்தவர்கள் 7 பேர் என்பதால்... பெற்றோரின் கஷ்டம் அறிந்து படித்து ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார்.
இந்த நிகழ்ச்சியின் இயக்குனரான ஜந்தையாலா, தான் இயக்கிய படத்தில் பிரம்மானந்தத்தை அறிமுகம் செத்தார். அதன்படி, 1987-ம் ஆண்டு வெளிவந்த ஆஹா நா பெல்லண்டா என்கிற திரைப்படம் இவருக்கு டோலிவுட்டில் அறிமுக படமாக அமைந்தது. அடுத்தடுத்து பல திரைப்படங்களில் காமெடியில் அசத்தினார். ஒரு கட்டத்தில் பிரம்மானந்தம் தன்னுடைய படங்களில் நடிக்க வேண்டும் என, பல முன்னணி நடிகர்கள் ஆசை பட்டு கேட்க்கும் அளவுக்கு வளர்ந்தார்.
தொடர்ந்து அழுத்தமான கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே நடிக்கும் இவர், தான் நடிக்கும் படங்களுக்கு சுமார் 2 முதல் 3 கோடி வரை சம்பளமாக பெருகிறாராம். இதை தவிர இவரை விளம்பரங்களில் நடிக்க வைக்கவும் பலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதன் மூலமாகவும் கோடிகளில் கல்லா கட்டுகிறார். இவருக்கு சொந்தமாக ஹைதராபாத்தில் பல வீடுகள் உள்ளது. அதே போல் 5-திற்கும் மேற்பட்ட கார்களை வைத்துள்ளார்.