ஒரு படத்துக்கு 2 கோடி சம்பளம்! 500 கோடிக்கு சொத்து சேர்த்துள்ள ஒரே தென்னிந்திய காமெடி நடிகர் யார் தெரியுமா?

First Published Apr 27, 2024, 9:46 PM IST

தென்னிந்திய திரையுலகில் 500 கோடிக்கு அதிபதியாக இருக்கும் பிரபல காமெடி நடிகர் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
 

அந்த காலத்தில் இருந்து, இந்த காலம் வரை, ஹீரோக்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைக்கப்படுகிறது. அதிலும் பல காமெடி நடிகர்கள் வந்து கொண்டே இருப்பதால் நடிகர்கள் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. இவை அனைத்தையும் தாண்டி ஒரு சில நடிகர்கள் மட்டுமே ரசிகர்களின் பல்ஸ் பார்த்து தங்களின் நடிப்பு திறமையை வெளிப்படுத்து எவர் கிரீன் நடிகர்களாக வலம் வருகிறார்கள்.
 

அந்த வகையில், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதத்தில் காமெடியில் கலக்கி வரும் நடிகர்  பிரம்மானந்தம் சொத்து மதிப்பு, வடிவேலு, விவேக்... போன்ற காமெடி நடிகர்களை விட மிகவும் அதிகம் என்பது உங்களுக்கு தெரியுமா?

Ramya Pandian: ரம்யமான அழகில்... மௌன புன்னகையை உதிர்க்கும் ரம்யா பாண்டியன்! சல்வாரில் கியூட் போட்டோ ஷூட்!
 

ஆந்திர மாநிலம் சட்டெனபள்ளி அருகே உள்ள ஒரு குக் கிராமத்தில் பிறந்தவர் தான் பிரம்மானந்தம். கடந்த 1956-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந் தேதி பிறந்தார். இவரது தந்தை மரவேலை செய்யும் ஆசாரியாக இருந்தவர். இவரின் உடன் பிறந்தவர்கள் 7 பேர் என்பதால்... பெற்றோரின் கஷ்டம் அறிந்து படித்து ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார்.
 

சிறு வயதில் இருந்தே நாடகங்கள், மற்றும் நடிப்பு மீது இவருக்கு தீரா காதல் என்பதால், கல்லூரியில் பணியாற்றிக்கொண்டே, நாடக கலைஞராகவும் பணியாற்றி வந்துள்ளார் பிரம்மானந்தம். இவரின் திறமைக்கு பரிசாக  தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் தன்னுடைய மிமிக்கிரி திறமை மற்றும் காமெடியான பேச்சால் பலரையும் கவர்ந்தார். 

லிஸ்ட் ரொம்ப பெருசா இருக்கே... பிரபல கிரிக்கெட் வீரர் உட்பட 7 பிரபலங்களுடன் காதலில் இருந்த ஸ்ருதி ஹாசன்!
 

 இந்த நிகழ்ச்சியின் இயக்குனரான ஜந்தையாலா, தான் இயக்கிய படத்தில் பிரம்மானந்தத்தை அறிமுகம் செத்தார். அதன்படி, 1987-ம் ஆண்டு வெளிவந்த ஆஹா நா பெல்லண்டா என்கிற திரைப்படம் இவருக்கு டோலிவுட்டில் அறிமுக படமாக அமைந்தது. அடுத்தடுத்து பல திரைப்படங்களில் காமெடியில் அசத்தினார். ஒரு கட்டத்தில் பிரம்மானந்தம் தன்னுடைய படங்களில் நடிக்க வேண்டும் என, பல முன்னணி நடிகர்கள் ஆசை பட்டு கேட்க்கும் அளவுக்கு வளர்ந்தார்.
 

35 வருடங்களுக்கு மேலாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சுமார் 1000-திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பிரம்மானந்தம், சமீப காலமாக அதிகப்படியான படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டு ஓவியம் வரைவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

Irfan: மத சர்ச்சையில் சிக்க வைத்த நெட்டிசன்! போடா செங்கல் சைக்கோ! ட்விட்டரில் கிழித்து தொங்கவிட்ட CWC இர்ஃபான்
 

தொடர்ந்து அழுத்தமான கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே நடிக்கும் இவர், தான் நடிக்கும் படங்களுக்கு சுமார் 2 முதல் 3 கோடி வரை சம்பளமாக பெருகிறாராம். இதை தவிர இவரை விளம்பரங்களில் நடிக்க வைக்கவும் பலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதன் மூலமாகவும்  கோடிகளில் கல்லா கட்டுகிறார். இவருக்கு சொந்தமாக ஹைதராபாத்தில் பல வீடுகள் உள்ளது. அதே போல் 5-திற்கும் மேற்பட்ட கார்களை வைத்துள்ளார். 
 

இவரின் சொத்து மதிப்பு சுமார் 500 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித், ரஜினி போன்ற நடிகர்களின் சொத்து மதிப்பை விட மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் தென்னிந்திய திரையுலகில் இவ்வளவு சொத்து சேர்ந்துள்ள ஒரே காமெடிய நடிகர் பிரம்மானந்தம் என்று கூறப்படுகிறது.

Sun TV Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பரபரப்பான தொடர் விரைவில் முடிவுக்கு வருகிறது! ரசிகர்கள் ஷாக்.!

click me!