Simran: சிம்ரனை காதலித்து கழட்டிவிட்ட நடிகர்கள் இத்தனை பேரா? இடுப்பழகியின் சீக்ரெட் லவ் ஸ்டோரி பற்றி தெரியுமா?

First Published Apr 4, 2024, 1:24 PM IST

தமிழ் சினிமாவில் பிசியான ஹீரோயினாக வலம் வந்த நடிகை சிம்ரன், அப்பாஸ், ராஜுசுந்தரம் ஆகியோரை காதலித்து உள்ளதாக கூறப்படுகிறது.

Simran

90களின் பிற்பாதியில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். ஹோம்லி மட்டுமல்லாது கிளாமர் வேடங்களிலும் அசால்டாக நடித்து அந்த காலகட்டத்தில் கனவுக்கன்னியாக வலம் வந்தார் சிம்ரன். சினிமாவில் ஆறு ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்த சிம்ரன், 2003ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட பின்னர் சினிமாவில் இருந்து படிப்படியாக விலகினார்.

சுமார் 10 ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த சிம்ரன், திரிஷா இல்லேனா நயன்தாரா படம் மூலம் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை தொடங்கினார். பொதுவாக ஹீரோயின்கள் பாபுலராக இருந்தால் அவர்களை பற்றி கிசுகிசுக்களுக்கும் பஞ்சமிருக்காது. அந்த வகையில் தொடர்ந்து பல்வேறு நடிகர்களுடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய சிம்ரன் எந்தெந்த நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டார் என்பது குறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறி இருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறியதாவது : “இப்போ நயன்தாரா எப்படியோ அதுமாதிரி தான் சிம்ரன் அந்த டைம்ல இருந்தார். எல்லாரையும் ரொம்ப ஈஸியா நம்பிடுவார். நடிகை சிம்ரன் உடன் முதன்முதலில் காதல் கிசுகிசுவில் சிக்கியது நடிகர் அப்பாஸ் தான். அந்த சமயத்தில் அவர்கள் இருவர் பற்றி அதிகளவில் காதல் கிசுகிசுக்கள் வந்தன. இதற்கு முக்கிய காரணம் சிம்ரனும், அப்பாஸும் விஐபி படத்தில் சேர்ந்து நடித்திருந்தனர். அந்த சமயத்தில் அப்பாஸ் மிகவும் பாப்புலரான நடிகராக இருந்தார்.

நடிகை சிம்ரனும், நடிகர் அப்பாஸும் திருமணம் செய்யப்போவதாக அந்த சமயத்தில் தகவல் பரவியது. இதன்பின்னர் அப்பாஸின் நலம்விரும்பிகள், இந்த காதல் அவரது கெரியருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கூறியதால், சிம்ரனை பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டார் நடிகர் அப்பாஸ். இதையடுத்து பிரபுதேவாவின் அண்ணன் ராஜு சுந்தரத்துடன் காதல் சர்ச்சையில் சிக்கினார் நடிகை சிம்ரன்.

இதையும் படியுங்கள்... Pugazh Net Worth: 50 ரூபாய்க்கு கிளீனராக வேலை பார்த்த.. விஜய் டிவி புகழ் இன்று இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா

பல வருடங்களாக இருவரும் காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில், ஒருகட்டத்தில் இருவரும் கல்யாணம் பண்ணிக்கொண்டதாகவும் தகவல் பரவியது. இது ஒருபுறம் இருக்க, ராஜு சுந்தரம் ஜோடியாக படத்தில் நடித்ததோடு, அவருடன் கவர்ச்சி நடனமும் ஆடி இருந்தார் சிம்ரன். அந்த சமயத்தில் பிரபுதேவா காதல் விவகாரம் அவரது குடும்பத்தில் சலசலப்பை ஏற்படுத்தியதால், மறுபடியும் ஒரு காதல் திருமணம் வேண்டாம் என குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்க, ராஜு சுந்தரம் - சிம்ரனின் காதல் முடிவுக்கு வந்தது.

click me!