தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, பலரும் ஆச்சர்யப்படும் அளவிற்கு உலக நாயகனாக உயர்ந்தவர் கமல்ஹாசன். 1960 ஆம் ஆண்டில் தமிழில் வெளியான 'களத்தூர் கண்ணம்மா' எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தன்னுடைய முதல் படத்திற்கே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான ஜனாதிபதி விருதை பெற்றார்.
பின்னர் இவர் நடித்த சில படங்கள் தோல்வியை தழுவினாலும்.. பல படங்கள் இவரின் சினிமா கேரியரை தூக்கி நிறுத்தியது. கமல்ஹாசன் சினிமா வாழ்க்கையில் எப்படி கே.பாலச்சந்தருக்கு முக்கிய பங்கு இருக்கிறதோ... அதே போல், கமல்ஹாசன் குடும்பத்தினர் கொடுத்த ஊக்கமும் தான் இவரை உலக நாயகனாக மாற்றியது.
எனக்கு ஏதாவது ஆகிவிட்டால், இந்த குழந்தை யார் வளர்ப்பார்? அதற்காகவாவது நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்த, வேறு வழியில்லாமல் சாருஹாசன் திருமணத்திற்கு சம்மதித்துள்ளார். இதன் பின்னர் தான் கோமளவல்லியை பார்த்து இவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணம் ஆகும் போது கோமளவல்லிக்கு 19 வயது தானாம். எனினும் கமல் பிறந்ததில் இருந்து அவரை வளர்த்தவர் அண்ணி கோமளவல்லி தானாம்.
அந்த நாளை தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாது என கூறியுள்ள கோமளவல்லி. இதுவரை நான் கமலை என் மகனாக தான் பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார். அதே போல் சாருஹாசனும் அவன் என் தம்பி என்பதை பல நேரங்களில் மறந்து விடுவேன். என்னுடைய மகனாக தான் பார்க்கிறேன் என உணர்வு பொங்க பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.