4 வருஷமாக வேறொருவருடன் உறவு... விவாகரத்து தர மறுக்கும் கணவன்! சிக்கித் தவிக்கும் பிக்பாஸ் சம்யுக்தா

First Published Oct 1, 2023, 10:53 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி தற்போது படங்களில் நடித்து வரும் நடிகை சம்யுக்தா, தனது கணவர் குறித்து முதன்முறையாக மனம்திறந்து பேசி உள்ளார்.

samyuktha shan

மாடலிங் துறையில் அதீத ஆர்வம் கொண்டவர் சம்யுக்தா. இவர் கடந்த 2020-ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட பின்னர் தான் மிகவும் பேமஸ் ஆனார். இவர் கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ரயான் என்கிற மகனும் இருக்கிறார். தனது மகனுடன் தனியாக வசித்து வரும் சம்யுக்தா, தன் கணவர் கார்த்திக்கை பிரிந்ததற்கான காரணத்தை வெளியிடாமலே இருந்து வந்தார். இந்த நிலையில், ஃபேன்ஸ் மீட் ஒன்றில் கலந்துகொண்டபோது தான் கணவரை பிரிந்ததற்கான காரணத்தை முதன்முறையாக சொல்லி உள்ளார் சம்யுக்தா.

samyuktha, bhavana

அவர் கூறியதாவது : “கடவுள் எனக்காக அனுப்பி வைத்த ஏஞ்சல் தான் பாவனா. அவர் தான் என்னை பிக்பாஸுக்கு அனுப்பி வைத்தார். கொரோனா லாக்டவுன் சமயத்தில் தான் துபாயில் இருக்கும் என் கணவர், 4 வருஷமா வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என்பது தெரியவந்தது. அதை அறிந்து மனமுடைந்து போனேன். என்ன பண்றதுனே தெரியாம இருந்தேன். அப்போ லாக்டவுன் போடப்பட்டு இருந்ததால் என்னாலும் துபாய்க்கு போக முடியவில்லை.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

BiggBoss samyuktha

என்னுடைய அப்பார்ட்மெண்ட் அருகில் தான் பாவனாவின் மாமனார் மாமியார் இருக்கிறார்கள். அவ்வப்போது பார்க்கும் போது ஹாய்.. பாய்னு மட்டும் சொல்லிப்போம். ஒருமுறை சும்மா வாக்கிங் போகலாம்னு கூப்பிட்டார் பாவனா. அப்போது என் பேமிலி பற்றியும் கணவர் பற்றியும் கேட்டார். அப்போ நான் நடந்ததை கூறி அழுதேன். அதுக்கப்புறம் தான் பாவனாவோடு நெருங்கி பழக ஆரம்பித்தேன். லாக்டவுன் சமயத்தில் இருவரும் ஒன்றாக ஒர்க் அவுட் செய்வோம். அப்படி தான் எங்கள் நட்பு வளர்ந்தது.

samyuktha husband

அதன்பின்னர் அவர் தான் என்னை பிக்பாஸுக்கு பரிந்துரை செய்தார். அவரால் தான் என் வாழ்க்கையே மாறியது. இப்போ சம்யுக்தா யாருன்னு உலகத்துக்கு தெரிகிறது என்றால் அதற்கு காரணம் பாவனா தான். இப்பவும் என்னால் கணவர் பிரிந்து சென்றதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் ஏன் இப்படி பண்ணார்னு சில நேரம் யோசிப்பேன். என் பையனும் அவ்வப்போது அப்பா எங்க என கேட்கும்போது, அப்பா வேலைல இருக்காரு, அவரால இந்தியா வர முடியவில்லைனு சொல்லுவேன்.

samyuktha divorce

அதேபோல் இரண்டாவது திருமணம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த சம்யுக்தா, முதல் திருமணமே இன்னும் விவாகரத்தில் முடியவில்லை என கூறினார். ஏனெனில் வெளிநாட்டில் இருந்துகொண்டு அவர் வர மறுப்பதனால் விவாகரத்து பெறமுடியவில்லை. எத்தனையோ முறை கேட்டுப்பார்த்தோம், ஆனால் அவர் அதற்கு செவிசாய்க்கவில்லை என தெரிவித்துள்ளார் சம்யுக்தா. 

இதையும் படியுங்கள்... கட்டப்பை முதல் காஸ்ட்லியான வைரம் வரை.. பிக்பாஸ் 7 போட்டியாளர்களுக்கு கமல் கொடுத்த ஆச்சர்ய பரிசுகள்! ஒரு பார்வை

click me!