முதல் கதையில் சிக்சர் அடித்துவிட்டு; அடுத்த கதையில் அவுட்டான பவா! இடுப்பை பற்றி பேசியதால் கடுப்பான ஹவுஸ்மேட்ஸ்

First Published Oct 5, 2023, 10:30 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள பவா செல்லதுரை எழுத்தாளர் பாலச்சந்திரன் பற்றி கூறிய கதை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Bava chelladurai

பரபரப்புக்கு விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத ஒரு ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இதுவரை ஆறு சீசன்கள் முடிந்துள்ள இந்நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள 18 போட்டியாளர்களில் புகழ்பெற்ற எழுத்தாளரான பவா செல்லதுரையும் ஒருவர். ஆரம்பம் முதலே சைலண்டாக இருந்ததால் இவரை நாமினேட் செய்து சுமால் பாஸ் வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.

Writer Bava chelladurai

பிக்பாஸுக்கு பவா செல்லதுரை வந்ததும், அவரிடம் தினமும் போட்டியாளர்களுக்கு கதை சொல்லச் செல்லி அனுப்பி வைத்துள்ளார் கமல். ஆரம்பத்தில் சைலண்டாக இருந்த இவர், முதல் நாள் சொன்ன ஓட்டம் என்கிற பவர்புல்லான கதை மூலம் ஆட்டத்துக்கு வந்தார். அவர் சொன்ன ஓட்டம் என்கிற கதையை கேட்டு அனைவரும் சிலாகித்து பேசினர். சோசியல் மீடியாவிலும் பவா செல்லதுரையின் ஓட்டம் கதைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Bava chelladurai, Balachandran Chullikkad

முதல் நாள் சொன்ன கதைக்கு வரவேற்பு கிடைத்ததால் நேற்று இரண்டு கதைகளை சொன்னார் பவா. அதில் ஒன்று கமலின் ரசிகர் மன்ற நிர்வாகியை பற்றியது. மற்றொன்று மலையாள எழுத்தாளர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பற்றியது. இந்தக் கதைப்படி, எழுத்தாளர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, தன் வீட்டுக்கு வந்த வேலைக்கார பெண்ணின் இடுப்பு வெண்ணைக்கட்டி போல் இருந்ததால், அதன் அழகில் மயங்கி, அதனை தொட்டுவிட்டார். உடனே அந்த பெண் கோபமடைந்து அந்த எழுத்தாளரின் கன்னத்தில் பளார் என அறைந்ததாகவும், பின்னர் அந்த பெண்ணிடம் அவர் மன்னிப்பு கேட்டதாகவும் கூறி இருந்தார்.

Bigg Boss contestant Bava chelladurai

பவா செல்லதுரை சொன்ன இந்த கதையை அனைவரும் சைலண்டாக கேட்டுவிட்டு, பின்னர் இதைப்பற்றி விவாதிக்க தொடங்கினர். ஒரு கட்டத்தில் அனைவரும் அவரது கதையை எதிர்த்து பேசத் தொடங்கினர். விசித்ராவும் பவாவிடமே நீங்க சொன்ன கதை சரியல்ல என ஓப்பனாகவே சொல்லிவிட்டார். பின்னர் ஜோவிகாவும் தனக்கு அந்த கதை புரியவில்லை என அவரிடமே விளக்கம் கேட்க, மறுபுறம் மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் இந்த கதையில் தங்களுக்கு உடன்பாடில்லை என சொல்ல அப்படியே சைலண்ட் ஆனார் பவா. 

vichitra, Bava chelladurai

முதல் கதையில் பெண்ணின் எழுச்சி பற்றி பேசி சிக்சர் அடித்த பவா, இரண்டாவது கதையில் இடுப்பை வர்ணித்து பேசி கடுப்பாக்கி உள்ளதாக நெட்டிசன்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் வீட்டில் எச்சில் துப்புவதை நிறுத்திக்கொள்ளுமாறு பிரதீப் கேட்டுக்கொண்டதற்கு, தன்னுடைய இயல்பை யாருக்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டேன் என கறாராக பவா சொன்னதும் விவாதப்பொருளாக மாறி இருக்கிறது.

இதையும் படியுங்கள்...பிக்பாஸ் போட்டியாளர் பிரதீப் ஆண்டனிக்கு இப்படி ஒரு மனநோய் இருக்கிறதா? அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்

click me!