விஜய் டிவியில் வித்தியாசமான கதைக்களத்துடன், பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், ஒரு சில தொடர்கள் மட்டுமே அதிக அளவில் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நல்ல வரவேற்பை பெற்ற தொடர்களில் ஒன்று, 'பாக்கியலட்சுமி' சீரியல்.
கடந்த ஆண்டு வரை பாக்கியா - ராதிகா - கோபி இடையே நடக்கும் பிரச்சனைகள் பற்றி இந்த சீரியல் சென்ற நிலையில், தற்போது ட்ராக் மாறி, பாக்கியா - கோபியின் பிள்ளைகள் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகள் காட்டப்பட்டு வருகிறது.
இந்த விஷயம் கோபி மற்றும் ஈஸ்வரிக்கு தெரிய வர, ஜெனிக்கு திருமணம் நடக்கும் முன் செழியனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கின்றனர். பாக்கியா இதை தடுக்க முயற்சி செய்தும் பலனில்லாமல் போகிறது.
செழியனுக்கு பெண் பார்க்க தரகரை வீட்டிற்கு வர வைத்து ஈஸ்வரி மற்றும் கோபி பேச, இதனால் கோபமடையும் செழியன் 'நான் இரண்டாவது திருமணம் பற்றி நினைத்து கூட பார்க்கவில்லை' என கத்திவிட்டு வீட்டை விட்டு செல்கிறார். அவரை பின் தொடர்ந்து எழிலும் செல்கிறார். நேராக மாலினி வீட்டிற்கு செல்லும் செழியன், உனக்கும்... எனக்கும்... இல்லாத உறவை சொல்லி என் வாழ்க்கையையே நாசமாக்கி விட்டியே என ஆதங்கப்படுகிறார். இதை மறைந்திருந்து பார்க்கும் எழிலுக்கு, உண்மையிலேயே செழியன் மீது எந்த தவறும் இல்லை என்பது தெரியவருகிறது.
Amala Paul Photos: கர்ப்பமாக இருக்கும் அமலாபால் மடியில் தவழும் கியூட் குழந்தை! வைரலாகும் புகைப்படங்கள்!