முத்துபாண்டியை அடி வெளுத்து கடப்பாறையால் குத்த போன சண்முகத்துக்கு காத்திருந்த அதிர்ச்சி - அண்ணா சீரியல் Twist

First Published Mar 2, 2024, 3:15 PM IST

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கி தாலி பிரித்து போட ஏற்பாடு செய்திருந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Anna serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கி தாலி பிரித்து போட ஏற்பாடு செய்திருக்க பாக்கியத்தின் திட்டம் சௌந்தரபாண்டிக்கு தெரிய வந்த நிலையில் இன்றும் நாளையும் நடக்கப் போவது என்ன என்பது பிடித்து பார்க்கலாம் வாங்க. அதாவது சண்முகம் குடும்பத்துடன் கோவிலுக்கு வர இசக்கி பார்த்த கனி ஓடிப்போய் கட்டிப்பிடித்துக் கொள்ள மற்ற தங்கைகளும் பரணியும் இசக்கியை ஓடி சென்று நலம் விசாரிக்க பிரிந்த தங்கைகள் பாசத்தை கொட்டிக் கொள்கின்றனர். 

Zee Tamil Anna serial

பிறகு சண்முகம் கோவிலை சுத்தி வரும் நேரத்தில் இசக்கிக்கு தாலி பிரித்து போடும் நிகழ்ச்சி நடந்து முடிகிறது. உடனே இசக்கி ஓடிப்போய் சண்முகம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க அவன் ஆசீர்வாதம் செய்யாமல் அங்கிருந்து நகர்ந்து சென்று விடுகிறான். பிறகு பரணி அதுக்கு ஒரு காரணம் இருக்கு என்று கவிதாவின் அக்காவும் அக்கா புருஷனும் வந்து சண்முகத்தை சந்தித்து பேசிய விஷயத்தை சொல்கிறார். 

இதையும் படியுங்கள்... டோலிவுட்.. மோலிவுட்.. கோலிவுட்.. பட்டையை கிளப்பும் அர்ஜுன் தாஸ் - கைவசம் எத்தனை படம் இருக்கு தெரியுமா?

Anna serial Update

இதையடுத்து சௌந்தரபாண்டி வீட்டுக்கு வந்ததும் சண்முகம் குடும்பத்தையும் இசக்கியையும் உங்க அம்மாவை சேர்த்து வைத்து விடுவா போல இத நடக்க விடக்கூடாது என முடிவெடுக்கின்றனர். உடனே சௌந்தரபாண்டி சண்முகம் உன்னை அடிக்கிற மாதிரி ஏதாச்சு பண்ணு என்று சொல்கிறார். அதன் பிறகு முத்துப்பாண்டி சண்முகத்தை சந்தித்து தப்பு தப்பாக பேச பொறுமையாக இருக்கும் அவள் முத்துப்பாண்டி தன்னுடைய அம்மாவை பற்றி தப்பாக பேசியதும் கொதித்து எழுகிறான். 

Anna Serial Today Episode

சண்முகம் முத்துபாண்டியை தூக்கி போட்டு அடி வெளுத்து கடப்பாறையால் குத்த போக இசக்கி தடுத்து நிறுத்து என்னை கொன்னுட்டு என் புருஷனை கொல்லு என அதிர்ச்சி கொடுக்கிறாள். இதனால் மனமடைந்து வீட்டுக்கு வந்த சண்முகம் இசக்கி இப்படி சொன்னதை வைத்து வருத்தப்படுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... சைலண்டாக மகனை வைத்து ஒரு படத்தையே எடுத்து முடித்த தனுஷ்... கோலிவுட்டில் அறிமுகமாகும் யாத்ரா..!

click me!