தளபதி விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான, 'பைரவா' திரைப்படத்தில் மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவியாக, ஒரு சிறு ரோலில் நடித்தவர் அம்மு அபிராமி. இதைத் தொடர்ந்து, 'என் ஆளுடைய செருப்பை காணோம்', படத்தில் கதாநாயகி சந்தியாவின் தோழியாக நடித்திருந்தார்.
தற்போது தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளிலும், படு பிஸியாக நடித்து வரும் அம்மு அபிராமி சில படங்களில் கதாநாயகியாக நடித்தாலும், பல படங்களில் கதைக்கும், கதாபாத்திரத்திற்கும், முக்கியத்துவம் கொடுக்கும் அழுத்தமான கேரக்டரை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவருடைய நடிப்பில் எட்டு படங்கள் ரிலீஸுக்கு தயாராகி உள்ளன.
அதாவது மார்ச் 16ஆம் தேதி நடிகை அம்மு அபிராமி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார் அப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இயக்குனரான பார்த்தீவ் மணி அபிராமியுடன் எடுத்த ஸ்டைலிஷ் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, குணா படத்தில் இடம்பெற்ற 'அபிராமி அபிராமி' என்ற பாடலுடன் மிகவும் உருக்கமான வரிகளால் வாழ்த்து கூறியுள்ளார்.
அதாவது "உன்னைப் போன்ற இனிமையான ஆன்மாவுக்காக, புன்னகை நிறைந்த முகங்கள் பலர் ஒன்று கூடி உன்னை வாழ்த்துகிறார்கள். ஹாப்பி பர்த்டே அபிராமி. எப்போதும் சந்தோஷமாக இரு என தெரிவித்திருந்தார்". இதற்கு அபிராமியும் எல்லாவற்றிக்கும் தேங்க்யூ என்று பதில் கொடுத்துள்ளார். இந்த பதிவு கொஞ்சம் சந்தேகத்தை தூண்டும் விதத்தில் இருந்தாலும், இந்த பதிவுக்கு, நடிகை ரித்திகா இவர்கள் இருவரையும் கலாய்ப்பது போல் ஆம் என இமோஜி போட்டுள்ளார். அதே போல் சிவாங்கி, குரேஷி ஆகியோரும் மாறி மாறி கலாய்த்துள்ளதால்... நெட்டிசன்களும் இவர்கள் இருவருக்கு இடையே ஒருவேளை ஏதாவது இருக்குமோ எனதங்களின் சந்தேகத்தை தெரிவித்து வருகிறார்கள்.
Vivek Daughter Wedding: மறைந்த நடிகர் விவேக் வீட்டில்.. மிகவும் எளிமையாக நடந்த அவரது மகள் தேஜஸ்வினி திருமணம்!