நடிகர் சந்தீப் கிஷன் மற்றும் விக்ராந்த் நடிப்பில் வெளியான 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மெஹ்ரீன் பிர்சாதா. பின்னர், நடிகர் விஜய் தேவரகொண்டா தமிழில் நடித்த 'நோட்டா' திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இவருக்கு கடந்த 2021-ஆம் ஆண்டு ஹரியானா முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரனும், காங்கிரஸ் தலைவருமான பவ்யா பிஷ்னோய்க்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இது பெற்றோர் பார்த்து ஏற்பாடு செய்த திருமணம் என கூறப்பட்ட நிலையில்... திருமண நிச்சயத்திற்கு பின்னர் இரு வீட்டு தரப்பினருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இந்த திருமணம் கை விடப்பட்டது.
தனக்கு குழந்தைகள் பெற்றுக் கொள்ள மிகவும் பிடிக்கும். ஆனால் 30 வயதுக்கு மேல் திருமணம் செய்து கொண்டால் குழந்தைகள் பிறப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இது போன்ற எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் குழந்தைகள் பெற்றுக்கொள்ள தன்னுடைய கரு முட்டையை செக்க முடிவு செய்ததாகவும்... அதற்கான உரிய ஆலோசை பெற்று, இதற்காக கடந்த இரண்டு வருடங்களாக என்னை தான் தயார் படுத்தி வந்தேன். என் கருமுட்டையை சேமிக்கும் முறை நடந்து வருகிறது என, தன்னுடைய வயிற்றில் ஊசி போடும் காட்சியை வெளியிட்டுள்ளார்.