
சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அனுப்பிய முதல் விண்கலம் ஆதித்யா எல்-1. இந்த விண்கலம் கடந்த மே 10, 12ஆம் தேதிகளில் சூரிய வெடிப்பைப் படமெடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள இஸ்ரோ, 2003ஆம் ஆண்டிற்கு பிறகு ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த சூரியகாந்த புயல் இது என்றும் தெரிவித்துள்ளது.
ஆதித்யா எல் 1 விண்கலம் சென்ற ஆண்டு செம்படம்பர் மாதம் ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. சூரியனை ஆய்வு செய்யும் முதல் திட்டமாகவும் இஸ்ரோ ஆதித்யா எல் 1 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது.
பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ. தூரம், 125 நாட்கள் பயணித்த ஆதித்யா எல் 1 விண்கலம் எல் 1 எனப்படும் லாக்ராஞ்சியன் புள்ளியில் கடந்த ஜனவரி மாதம் நிலைநிறுத்தப்பட்டது. சூரியனின் ஈர்ப்பு விசையும் புவி ஈர்ப்பு விசையும் சரிசமமாக உள்ள பகுதி எல் 1 அல்லது லாக்ராஞ்சியன் புள்ளி என அழைக்கப்படுகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.