ஜோதிகா, மும்பையை சேர்ந்தவர் என்றாலும்... தமிழ்நாட்டு மருமகளாவார். நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர், ஒட்டு மொத்தமாக சினிமாவில் இருந்து விலகினார்.
குழந்தைகளுக்காக பல வருடங்கள் சினிமாவில் இருந்து விலகியே இருந்த ஜோ, பிள்ளைகள் வளர்ந்த பின்னர் 2015-ஆம் ஆண்டு கணவர் சூர்யாவின் முழு ஒத்துழைப்புடன் மீண்டும் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார்.
இந்த படத்திற்கு பின்னர் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையே அதிகம் தேர்வு செய்து நடிக்க துவங்கினார். அப்படி இவர் நடித்த ஜாக்பார்ட், மகளிர் மட்டும், நாச்சியார், ராட்சசி, உடன் பிறப்பே, போன்ற படங்கள் முதலுக்கு மோசமில்லாமல் வசூல் செய்தது.
அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான, சைத்தான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து, இவரின் கைவசம் இரண்டு ஹிந்தி படங்கள் உள்ளது. மற்ற மொழி படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
ஜோதிகாவின் லேட்டஸ்ட் லுக்கை பார்த்து ரசிகர்கள்... இவருக்கு 45 வயதா என ஆச்சர்யத்தோடு கேட்பது மட்டும் இன்று, இரண்டு குழந்தைக்கு அம்மா இவர் என சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள் என்றும் தன்னுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.