யோகா செய்யும் போது ஆற்றில் விழுந்த பெண்னின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இணையத்தில் கொட்டிக்கிடக்கும் வீடியோக்கள் பல. அவற்றுள் சில வீடியோக்கள் நம்ம அறியாமலேயே சிரிக்க வைக்கும். சில வீடியோ சிந்திக்க வைக்கும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தண்ணீருக்கு மேல் ஒரு மரத்தடியில் யோகாசனம் செய்ய முயற்சிக்கும் போது ஆற்றில் விழுந்த பெண் ஒருவரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. யோகா என்பது இயற்கையுடன் இணைவதற்கும், உள் அமைதியைக் காண்பதற்கும் ஒரு அழகான வழியாகும்.

இருப்பினும், அதில் உள்ள அபாயங்கள் குறித்து கவனமாக இருப்பது முக்கியம். ஒரு பெண் ஆற்றின் மீது ஒரு மரத்தடியில் யோகாசனம் செய்ய முயற்சிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோ குறித்து விசாரிக்கும் போது, சம்பந்தப்பட்ட வீடியோ முதலில் 2017 இல் வெளியிடப்பட்டது என்றும், தற்போது அது மீண்டும் இணையத்தில் வைரலாக தொடங்கியது என்றும் தெரிகிறது.

இதையும் படிங்க..Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வெல்லப்போவது எந்த கட்சி.? வெளியானது பரபர சர்வே முடிவுகள்

இதில் உள்ள பெயர் மேரி. இவர் சுமார் நான்கு அல்லது ஐந்து அடி தண்ணீரில் விழுந்தாலும், அவர் காயமடையாமல் இருந்தார். ஆற்றின் நீரோட்டத்தில் 30 அடி கீழே அடித்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த வீடியோ ட்விட்டரில் 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

Scroll to load tweet…

இதுபோன்ற ஸ்டண்ட் செய்வதற்கு முன்பு தகுந்த பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். எதிர்பாராத அபாயங்கள் எங்கும் ஏற்படலாம் என்பதால் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்த வீடியோ நினைவூட்டுகிறது. இந்த வீடியோ ட்விட்டர் மட்டுமல்லாமல், எல்லா சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க..Bank Holiday : மார்ச் மாதத்தில் வங்கி விடுமுறை எத்தனை நாட்கள் தெரியுமா.? முழு விபரம் உள்ளே !!