Asianet News TamilAsianet News Tamil

சிங்கப்பூர் வாசிகளே சூப்பர் ஆஃபர்! மின்சாரத்தை சிக்கனமா பயன்படுத்துங்க... ஊக்க தொகையை அள்ளுங்க!

சிங்கப்பூரில், மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு இனி ஊக்கத்தொகை வழங்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இது அடுத்த ஆண்டு இறுதிக்குள் நடைமுறை படுத்தப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

Super offer for Singaporeans! Use electricity sparingly, sg govt plan to provide incentives!
Author
First Published Oct 25, 2023, 9:14 AM IST

சிங்கப்பூரில் வசிக்கும் குடும்பங்கள் மின்சாரத்தை தேவைக்கு சிக்கனமாகப் பயன்படுத்த பல்வேறு வழிமுறைகளை அந்நாட்டு அரசு அறிவித்து வருகிறது. மேலும், குறிப்பாக மின்தேவை உச்ச நேரங்களின் போது மின்சாரப் பயன்பாட்டை குறைக்கவும், வீடுகளில் தேவைக்கேற்ப மின்சார பயன்பாட்டை கண்காணிக்கவும் புதிய சாதனம் ஒன்று பொருத்த சிங்கப்பூர் அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த நடைமுறை அடுத்த ஆண்டின் 2வது பாதியில் நடைமுறைக்கு வரும் எனவும் அரசு அறிவித்துள்ளது. வீடுகளில் பொருத்தப்படும் இந்த புதிய சாதனம், மக்கள் பயன்படுத்தும் மின்சாரப் பயன்பாட்டை கண்காணித்து அதை குறைத்துக்கொள்ள தேவையான வழிமுறைகளை பரிந்துரைக்கும்.

சிங்கப்பூரில் கடந்த மாத நிலவரப்படி குடியிருப்பு வீடுகளிலும் மற்ற இடங்களிலும் சுமார் 8,34,000க்கும் அதிகமான மின்சார கண்காணிப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் SP குழுமம் தெரிவித்துள்ளது.

சேர்த்துவைத்த மொத்தமும் போச்சு.. ஆன்லைன் மோசடியில் சிக்கிய முதியவர் - சிங்கப்பூரர்களே ஜாக்கிரதையா இருங்க!

சிங்கப்பூர் மக்களுக்கு செல்போன் மூலம், தேவைக்கு ஏற்ப மின்சார பயன்பாட்டைக் குறைக்கும்படி சிங்கப்பூர் SP குழுமத்தின் ஆப் -செயலி மூலம் உடனுக்குடன் தவகல் குறிப்புகள் அனுப்பப்டுகின்றன.

அவ்வாறு மின்தேவையை கட்டுப்படுத்தும் குடும்பங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.

சிங்கப்பூரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு! கடந்த ஆண்டை விட 5% அதிகரிப்பு!

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Follow Us:
Download App:
  • android
  • ios