உலகில் பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள 4 இடங்கள் உள்ளன. அது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம். 

Women Banned Places In The World: இன்றைய நவீன உலகின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு அளப்பரியது. பொருளாதாரம், விண்வெளி என அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்களும் சிறந்து விளங்குகின்றனர். ஆனாலும் உலகில் பல இடங்களில் பெண்கள் நுழைய பல காரணங்களுக்காக தடை விதிக்கப்பட்டுள்ளது. அது மத ரீதியானதாகவோ அல்லது பழங்கால நடைமுறையாகவோ இருக்கலாம். உலகில் பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்ட 4 இடங்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

மவுண்ட் ஓமைன், ஜப்பான் (Mount Omine, Japan)

ஜப்பானின் நாரா மாகாணத்தில் அமைந்துள்ள மவுண்ட் ஓமைன், பெண்கள் செல்வதற்கு கட்டுப்பாடுகள் உள்ள புனிதத் தலமாகும். ஜப்பானிய மலை துறவி பாரம்பரியமான ஷுகெண்டோவில் துறவற நடைமுறைகளுக்கான பயிற்சி மைதானமாக இந்த மலை கருதப்படுகிறது. அதன் ஆன்மீக புனிதத்தன்மையைப் பாதுகாக்க பெண்கள் மலையில் ஏறவோ அல்லது சில பகுதிகளுக்குள் நுழையவோ அனுமதிக்கப்படுவதில்லை.

ஒகினோஷிமா தீவு, ஜப்பான் (Okinoshima Island, Japan)

ஜப்பான் கடலில் அமைந்துள்ள ஒகினோஷிமா தீவு, அதன் மத முக்கியத்துவத்திற்காக அறியப்படும் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தல‌மாகும். பழங்கால ஷின்டோ மரபுகள் காரணமாக பெண்கள் தீவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. புனிதமாகக் கருதப்படும் இந்த தீவின் தூய்மையைப் பராமரிக்க இந்தத் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஜஸ்டின் ட்ரூடோ இனி இல்லை.. கனடா பிரதமராக மார்க் கார்னி தேர்வு: லிபரல் கட்சி அறிவிப்பு

மவுண்ட் அதோஸ், கிரீஸ் (Mount Athos, Greece)

மவுண்ட் அதோஸ் என்பது கிரேக்கத்தில் உள்ள ஒரு தன்னாட்சிப் பகுதியாகும். இது ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவத்தின் புனிதமான தலங்களில் ஒன்றாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள் மவுண்ட் அதோஸில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு துறவற வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கும் ஆன்மீக நோக்கங்களிலிருந்து கவனச்சிதறலைத் தவிர்ப்பதற்கும் பெண்கள் நுழைய தடை விதித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பர்னிங் ட்ரீ கிளப், அமெரிக்கா (Burning Tree Club, USA)

அமெரிக்காவின் மேரிலாந்தின் பெதஸ்தாவில் பர்னிங் ட்ரீ கிளப் அமைந்துள்ளது. இது முழுக்க முழுக்க ஆண்களின் கோல்ஃப் கிளப் ஆகும். இந்த கிளப் 1922 இல் திறக்கப்பட்டது. இந்த கிளப்பில் பெண்கள் உறுப்பினர்களாகவோ அல்லது மைதானத்தில் விளையாடவோ அனுமதிக்கக் கூடாது என்ற கொள்கையைக் கொண்டுள்ளது. இந்தக் கொள்கையை மாற்றுவது குறித்து அவ்வப்போது விவாதங்கள் நடந்தாலும், அது மாறாமல் உள்ளது.

சிரியாவில் 2 நாட்களில் 1000 க்கும் மேற்பட்டோர் பலி! குறிவைக்கப்படும் அவலைட்டுகள்!