Asianet News TamilAsianet News Tamil

பி.எப்.ஐ. தடை, நெல்லையில் காவல் துறையினர் குவிப்பு

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு இந்தியாவில் 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கக் கூடிய மேலப்பாளையம் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் அண்மையில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த அலுவலகங்கள், முக்கிய நிர்வாகிகளின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த சதி தீட்டப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், இந்த அமைப்பை இந்தியாவில் 5 ஆண்டு காலம் தடை செய்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கக் கூடிய பகுதியான மேலப்பாளையம் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Video Top Stories