அவதூறு அண்ணாமலையின் பேச்சு மிகவும் கேவலமானது - துரை வைகோ ஆவேசம்
பாபுலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்கும் மத்திய அரசு பஜ்ரங்தள், ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. உள்ளிட்ட அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று மதிமுக தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ கேள்வி எழுப்பி உள்ளார்.
நன்கு படித்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அவதூறு அண்ணாமலை நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தொடர்ந்து தெரிவித்து வரும் கருத்து மிகவும் கேவலமானது என்று மதிமுக தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.