குப்பை கொட்டினால் ரூ.1000 அபராதம்... கவனத்தை ஈர்த்த அறிவிப்பு பேனர்!!
கோவையில் வைக்கப்பட்டுள்ள பெங்காலி மொழியில் பேனர் பலரின் கவனைத்தை ஈர்த்து வருகிறது.
கோவையில் வைக்கப்பட்டுள்ள பெங்காலி மொழியில் பேனர் பலரின் கவனைத்தை ஈர்த்து வருகிறது. கோவை காந்தி பார்க் பகுதியில் பொது இடத்தில் குப்பை கொட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படுவதாகவும் தமிழ் மற்றும் பெங்காலி மொழிகளில் கோவை மாநகராட்சி சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் வட மாநிலத்தவர் அதிகம் வசிப்பதால் பெங்காலி மொழியில் பேனர் வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை மாநகராட்சி சார்பில் பெங்காலி மற்றும் தமிழில் வைக்கப்பட்டுள்ள பேனர் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.