மங்களூவில் தனியார் கல்லூரி விடுதியில் இருந்து 3 மாணவிகள் தப்பி ஓட்டம்!!
மங்களூருவில் தனியார் பியூ கல்லூரி விடுதியில் இருந்து மூன்று மாணவிகள் தப்பி ஓடிய சம்பவம் நடந்துள்ளது.
மங்களூருவில் தனியார் பியூ கல்லூரி விடுதியில் இருந்து மூன்று மாணவிகள் தப்பி ஓடிய சம்பவம் நடந்துள்ளது. மாநகரில் உள்ள மேரிஹில் விமான நிலைய சாலையில் உள்ள இந்த கல்லூரியில் மாணவிகள் விடுதியின் ஜன்னலை உடைத்து தப்பியுள்ளனர். மாணவிகளில் இருவர் பெங்களூருவை சேர்ந்தவர்கள் என்பதும், மற்றொரு மாணவி சித்ரதுர்காவை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. மாணவிகள் பியுசி படித்து வருகின்றனர். "நாங்கள் வெளியேறுகிறோம், மன்னிக்கவும்" என்று நோட்டில் எழுதப்பட்டு அதிகாலை 3 மணிக்கே சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து கங்கநாடிடவுன் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.